நான் படித்ததில் மிகவும் ரசித்தது... சிரிப்பு!.... எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு... உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை சிரிப்பு இடம்மாறிய முரண்பாடுகளே இதிகாசங்கள் ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் அதுதான் பாரதம் ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள் அதுதான் ராமாயணம் எந்தச் சிரிப்பும் மோசமாதில்லை சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில் மரணம் உட்கார்வதேயில்லை ஒரு பள்ளத்தாக்கு முழுக்கப் பூப் பூக்கட்டுமே ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா? ஒவ்வொரு சிரிப்பிலும் ஒருசில மில்லிமீட்டர் உயிர்நீளக் கூடும் மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு நன்றி வைரமுத்து... இப்படிக்கு நந்தம்
Hi Nantham, Ellam arumai..The best among the lot was the candle and the baby..Sindhanai kavidhai - Indhe kaalathil adhu adhisayam alle nadaimurai aagivittadhu.
Hai Nantham Thanks for sharing a kavidhai about sirippu. Nice connection between ramayanam and mahabharatham to sirippu. ovvoru varthaiyum arumai. migavum rasithen. andal