அடி, உதை, குத்துக்கு… உடம்பு வலித்தும் உள்ளம் வலிக்கவில்லை… பேரப்பிள்ளைகளின் செல்லம்? _____________________________________________ பெண் தெய்வம் பயந்து ஓடுகிறது எதிரே போலிச்சாமியார்! _____________________________________________ அவளுடைய இதழ்களும் குறள்தானோ? இரண்டே வரியில் எத்தனை பாடங்கள்…? _____________________________________________ அப்பா இறப்பிற்கு சிரித்தபடி அம்மா புகைப்படத்தில்! _____________________________________________ உனக்கு கவிதை எழுத தெரியுமா என்றாய் தெரியாது ஆனால் பார்த்து கொண்டிருக்கிறேன் என்றேன். _____________________________________________ அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை. _____________________________________________ என்ன வேண்டுதலோ… மொட்டை போட்டது மரம் இலையுதிர் காலம்! _____________________________________________ அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்