பூலோகம் தோன்றியது முதல் கோடிக்கணக்கான யுகங்களாக கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு, மனித குலத்திடமிருந்து எவ்விதக் கைமாறும் எதிர்பாராது, பால் அளித்து ஜீவ சக்தி தரும் உத்தம “அன்னை ஸ்தானத்தைப்” பெற்றுள்ள பசுவின் உடலில் எத்தனை கோடி தேவாதி தேவர்களும் தேவ மூர்த்திகளும் உறைகின்றனர். “பிருஷ்டபாகம்” எனப்படும் பசுவின் வாலின் மேற்புற இருபகுதிகளிலும் ஸ்ரீலட்சுமி தேவி வசிக்கின்றாள். பசுவைக் காணும் போதெல்லாம் பசுவின் பிருஷ்ட பாகத்தைத் தொட்டுக் கண்களில், ஒற்றிக்கொள்ளுங் கள். பள்ளிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், சம்பளப் பணம், வியாபாரத்தின் முதல்வரவு போன்றவற்றைப் பசுவின் பிருஷ்ட பாகத்தில் வைத்து வணங்கி எடுக்கும் நற்பழக்கத்தை இன்றும் பல குடும்பங்களில் கடைபிடிக்கின்றனர்.