*வைஷ்ணவ* * "பரிபாஷை*" *பெருமாள்* - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு *பிராட்டி* - ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி *தாயார்* -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி *நம்பெருமாள்* - ஸ்ரீரங்க கோவில் உற்சவர் *பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர் *பெரியபிராட்டி* - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) *தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் *உற்சவர்* - கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி *மூலவர்* - கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி *செல்வர்* - உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) *யாகபேரர்* - பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. *கோயிலொழுகு* - கோவிலின் வரலாறு கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை. *வீற்றிருந்த* *திருக்கோலம்* - அமர்ந்து எழுந்தருளும் சேவை. *நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை. *ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும் *பெரியஉடையார்* -ஜடாயு *இளையபெருமாள்* - இலக்குவன்/லக்ஷ்மணன் *எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன் *இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன் *யதிராசர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) *யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) *ஸ்வாமி* - முதலாளி *ஆழ்வான்* - கூரத்தாழ்வான் *ஆண்டான்* - முதலியாண்டான் *லோகாச்சார்யர்* - நம்பிள்ளையின் மற்றொரு பெயர் *பட்டர்* - பராசர பட்டர் *நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) *வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன் *ஜீயர்* - ஸன்யாசி *பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் - மணவாள மாமுனிகள் வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் *சடாரி* (ஸ்ரீ சடகோபம்) - எம்பெருமானாரின் பாத கமலங்கள் *ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் *மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள் *முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள் *அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் *பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள் *அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் *தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை *அடியேன்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை *அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை *தாஸன்* - அடிமை, அடியேன் *ஆசார்யர்* - குரு, ஆசான் *பூர்வாசார்யர்* - ஆசாரியரின் முன்னோடிகள் *பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர் *திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் *உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) *ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் *க்ரந்தம்* - புத்தகம் *வ்யக்யானம்* - விளக்கம் *காலக்ஷேபம்* - க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு *உபன்யாசம்* - சொற்பொழிவு *உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள் *நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு *லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் *விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி *விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் *சேஷி* - தலைவன் *சேஷன்* - தொண்டன் *சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு *பாரதந்த்ரியம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் *அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் *தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் *பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் *பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: *ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன *பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் நோவு சாற்றிக்கொள்ளுதல் - ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை *கண்வளருதல்* - உறக்க நிலை *கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) *எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் *புறப்பாடுகண்டருளல்* - திரு உலா *குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல் *திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் *நீராட்டம்* - குளித்தல் *போனகம்* - உணவு *ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம் *காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் கேட்கிறார் *காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் சொல்லுகிறார் *சாதித்து* *அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் *நாயந்தே* - அடியேன் *திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் *திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம் *அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்) *ப்ரஸாதம்* - அன்னம் *குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார் *சாற்றமுது* - ரசம் *கரியமுது* - காய்கரி/பொரியல் *திருக்கண்ணமுது* - பாயசம் *தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம் *புளியோதரை* - புளி சாதம் *அக்காரஅடிசில்* - சர்க்கரையால் செய்த சாதம்.. Though it is a forward I am quite familiar with this Paribashai ,being born and brought up in Srirangam.Mann vaasanai veesugirathu. Jayasala 42