பையனுக்கு... 'வேலை இல்லை' என்று வேண்டியவர் சொன்னார் 'ஜாதகம் ரொம்ப பொருத்தம்' என்று ஜோதிடர் சொன்னார் ஜோராய் நடந்தது திருமணம் . இன்று தம்பதிகள் ஜோடியாய் பட்டினி இதுதான்... ஜோதிடர் சொன்ன பொருத்தமோ!???
மனம் வாடி உடல் வாடி இருப்போருக்கு மணம் ஒரு குறையா??? மணந்தது அப்பென்னில் பிழையா?? பளீர் வரிகளில் சுரீர் கவிதை சூப்பர் புஷ்பலதா.
பத்துப் பொருத்தமா? பட்டினிப் பொருத்தமா? ஜோதிடர்களுக்கு வேலை இல்லை, எனும் நிலை இன்றில்லை என்பதே வாஸ்தவம். பொருத்தம் பார்த்து வருத்தம் வந்ததை, பொருட்டாக என்னாது வருத்தம் களைய முற்படுதலே முக்கியம்.
வேலை இல்லா ஜோதிடருக்கு (வே)காசோலை கிடைத்தது அவரின் கைங்கரியத்தினால் இப்போது இரண்டு வேலை இல்லா பட்டதாரிகள் ஒரே வீட்டுக்குள். நட்ஸ் நான் சொல்ல எண்ணியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் வருத்தம் தரும் பொருத்தம்...அபத்தம்.
மாப்பிள்ளைக்கு வேலையில்லை என்று சொந்தக்காரர் சொல்லியும் கேளாமல் ஜாத பொருத்தத்துக்கு மட்டும் பார்த்து திருமணம் செய்து வைத்து ...இன்று சாப்பாடும் போட்டு செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். பையன் வேலை தேடவே சோம்பேறியாக இருக்கிறான் . இது எனக்கு தெரிந்த ஓர் இடத்தில் நடந்து கொண்டிருக்கும் கதை , பையனை பற்றி சரியாக விசாரிக்காததனால் வந்த வினை . அதைத்தான் கொஞ்சம் அழுத்தி சொல்லியிருக்கிறேன். நன்றி வேணி , நட்புடன் , சரோஜ் .
Someone I knew dropped an alliance, because an astrologer predicted that the girl would give birth to a girl baby and not boy baby. ஆயிரம் இல்லை, லட்சம் பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது
மக்கள் மயங்கி விடுகின்றனர்......... ஜோதிடன் பேசும் பேச்சை (பொய்யை) கேட்டு ஜோதிடம் திடபடுத்தும் ஜோதிடரை காயபடுதும் பின்பற்றுவோரை லதா உங்கள் கவிதை நன்று