நீண்ட நாள் தேடியது தற்செயலாய்க் கிடைத்தது போல், பிரியம் மிக்க நட்பானது நம்மெதிரே வந்தது போல், பசிக்கொடுமை வருத்துகையில் பெருவிருந்தைக் கண்டது போல், பெருந்தாகத்தில் துவளுகையில், நீர்நிலையைக் கண்டது போல், எப்போதோ நினைவில் கண்ட தாயுரு எதிர் நிற்பது போல், எப்போதும் நானுணர்ந்த அன்பே உருக் கொண்டது போல், என்று என்று மென்மேலும் நான் சொல்ல முயலுகையில், ஒரு மௌனம் என் மேலும், மேகமெனக் கவிகிறது. அரிதான பொருள் ஒன்றை, அடைந்தவனைத தவறாது அடைகின்ற மௌனத்தை, அனுபவத்தில் உணராது இருந்திருந்தேன் இத்தனை நாள் நானும். இனி ஈசா! உன் புகழ் சொல்வேன் நாளும். -ஸ்ரீ