வேண்டும்,வேண்டும் வலி வேண்டும், என,வேண்டும் இனம் நம் பெண்ணினம், ஆம்,ஐயிரு திங்கள் தம் கருவினில் தாங்கி, அதிலிருக்கும் தம் தவப்பயனை தரணியில் இறக்கிட, வேண்டும்,வேண்டும் பிரசவ வலி வேண்டும் , என வேண்டும் இனம் நம் தையல் இனம், பத்துமாதங்களும் ,பல பல விதமாய், தன் உரு மாற்றத்தை அனுபவித்து, தாய்மையில் பூரித்து,வலிகளை பொறுத்து, பக்குவமாய் பத்தியமிருந்து,நடை நடந்து, தன் குழந்தை வெளிவரும் நாளை,ஆர்வமாய் நோக்கி, தன்னை தானே வருத்திக் கொண்டு, அம்மா,அப்பா,என அலறி துடித்து, கணவன் முதல்,கல்யாண தரகன் வரை , அனைவரையும் வாயில் வந்தபடி வைதாலும், வேண்டும்,வேண்டும்,வலி வேண்டும் , என வேண்டுவது நம் பூவையர் இனம்.
கவிதை மிக நன்றாக இருந்தது தீபா. வாழ்த்துக்கள். "கணவன் முதல்,கல்யாண தரகன் வரை , அனைவரையும் வாயில் வந்தபடி வைதாலும்," கணவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தீபா? -ஸ்ரீ
உயிருக்கு உயிராக உயிருக்குள் உயிராக நினைவும் நிஜமும் நானாக நித்தம் உடலை வருத்தி பத்தியம் இருந்து நித்திரை இழந்து மறு உயிர் பெற்று வாழும் வாழ்கையை தியாகம் செய்தவள் !......வலை தளத்தில் படித்த வரிகள் தோழியே பூவையரின் பேரிளம் வலி வேண்டும் இந்த வரிகள் ..... மண்ணுக்குள் பொதிந்திருக்கும் மரகதங்களை இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ வைத்திட தனக்குள் ஒரு சகிப்பின் சன்னதி உருவாக்கும் தாய்மையின் பெருமைக்கு தரணியில் நிகரில்லை நானும் பெருமிதம் அடைகிறேன்......உங்கள் கவிதையின் வழியாய் Bow.
dear saroj, thanks for your reply. பிரசவம் ஒரு மறுபிறப்பு.தாய்மை மிக,மிக சிறந்தது. உண்மையில் ,வலிகளில் மிக அதிக பட்சமானது பிரசவ வலி,என்பது நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அதை ஆவலாக வேண்டும் இனம் நாம் இனம்,இல்லையேல் எப்படி தாண்டியது மக்கள் தொகை 130 கோடிகளை .
வலிகளை தாங்கும் இதயம் பெண்ணுக்கு மட்டும் தான் உள்ளது அந்த வழிகளில் மீண்டும் வரும் சக்தியும் உளத்து அவர்களுக்கு மட்டும் தான் தன்னம்பிக்கையில்