நல்ல பேச்சுத் திறமை மிக்க இந்தியன் ஒருவன், நல்ல நாளில், விற்பனையாளனாக, லண்டனில் பணிக்குச் சேர்ந்தான்; முதல் நாள் வேலைதனை இனிதே முடித்த பின்பு, முதலாளியிடம் செல்ல, 'இன்று எத்தனை பேருக்கு விற்பனை செய்தீர்?' என்று அவர் வினவ, 'ஒருவருக்கு!' என்று பதில் வர, கோபத்துடன் அவர், 'ஒருவருக்கு மட்டுமா? வரும் நாட்களில் மேலும் பலருக்கு விற்கணும்! எங்கள் விற்பனையாளர்கள், ஒரு தினத்திற்கு தங்கள் பங்காக, பத்துக்கு மேல் செய்வார்களே!' என்று உரைத்த பின், 'எத்தனை பவுண்டுகளுக்கு இன்று பொருட்களை விற்றீர்கள்?' என்று கேட்க, 'ஒன்பது கோடிப் பவுண்டுகள்!' என்று கூறி, அது வந்தது எப்படி என்று விளக்கமாகக் கூறினான்! 'மீன் பிடிக்கும் சின்னக் கொக்கியை முதலிலும், பின் மிகப் பெரிய கொக்கியும், அதை மாட்டிடப் பெரிய தூண்டிலும், ஏரியில் மீன் பிடிக்கப் போகப் பெரிய படகும், பெரிய அப்படகை இழுத்துப் போக மிகப் பெரிய காரும் விற்ற பின், அவர் குடும்பம் அகம் மகிழத் தங்க, ஐவர் வசிக்கும் 'டென்ட்'டும் விற்றதில் இத்தனை பணம் கிடைத்தது!' என்றிட, 'விற்றது இத்தனை பொருட்களா, மீன் பிடிக்கச் சின்னக் கொக்கி கேட்டு வந்தவரிடம்?' முதலாளி இன்னும் அதிசயித்துக் கேட்க, அவன் பணிவாக, 'தலைவலி மாத்திரைதான் அவர் வந்து கேட்டார்! தலைவலி போக மீன் பிடிக்கும் பொழுதுபோக்கே மிக நல்லது என்று புரிய வைத்தேன்!' என்று கூற, 'மிக நல்லது தம்பி! இனி இதுவே உனது ஆசனம்!' என்று மனமகிழ அவர் காட்டியது, பெருமையாக அன்று வரை அவரே அமர்ந்திருந்த சிம்மாசனம்! :bowdown . . . :thumbsup