ஒவ்வொரு புறக்கணிப்பும் என்னை மேலும் இறுகிடத் தான் செய்ததென உணர்ந்தே மீண்டும் முயல்வதினை தொடர்ந்தேன், கரையை அலைகளென. எப்போதோ சொன்ன சிறு சொற்கள், அரிதாக எனைப் பாராட்டியது, புன்னகைக்க, தெரிந்திடும் வெண்பற்கள், இவை தானா என்னை மயக்கியது? அறியேன் எனினும் ஒரு முடிவை நான் எட்டியே வெகு நாளானதுவே! இனி இன்னொருவருடன் என் வதுவை நிகழாது! ஆம்! அது நிச்சயமே! தாமரை இலையாய் எனை விலக்கி நான் இருந்தேன் பன்னெடுங்காலம் வரை! காமனை உன்னுரு, செயலால் புகுத்தி, நீ ஈர்த்ததில் விழுந்தது எனது வளை! என்றேனும் ஒரு நாள் எனை நீயும் அங்கீகரிப்பாய்! ஆம்! அது நிகழும்! அன்றே நெகிழ்ந்தும், கரைந்தும் நானும் மலர்வேன், அந்நாளும் விரைவில் வரும்!
நம்பிக் கைப் பிடித்தாள் ! நம்பிக் கையைப் பிடித்தாள் ! நம்பிக்கையைப் பிடித்தாள் ! நம்பிக்கையே வாழ்வல்லவோ, நன்று நவின்றிட்டீர் , நன்றி !