எங்களுக்கு வானம்தான் கூரை பூமிதான் விரிப்பு பலர் இருப்பதோ guest house நாங்கள் இருப்பதோ dust house பலர் குடிப்பதோ mineral water நாங்கள் குடிப்பதோ கலங்கல் water பலர் குளிப்பதோ பன்னீரில் நாங்கள் குளிப்பதோ கண்ணீரில் டென்குவும், மலேரியாவும் எங்கள் உறவினர்கள் அவர்களை தவிர வேறு யாரு எங்களை சீண்டுவார்கள் எங்கள் வாழ்க்கையில் பலநாட்கள் வியாதியோடு உறவாடுவோம் சிலநாட்கள் பட்டினியோடு போராடுவோம் எங்களுக்கு எப்பொழுதுதான் விடிவு காலம் அது இறைவனே அறியாத காலம் நாங்கள் காத்திருக்கின்றோம் அவனின் அழைபிற்காக
வறுமையை விழி முன் நிறுத்திய அழகிய வரிகள். உணர்ந்து சொன்ன வார்த்தைகைளின் கோர்வையும் அருமை. ஒரு சிறு விதை, மண்ணின் புதைத்ததுடன் தன வாழ்க்கை முடிந்து போனது என எண்ணி மடியாமல், முட்டி மோதி வெளி வரும் போதுதான் தளிராகவும், செடியாகவும், பின் மரமாகவும் ஆக முடியும். ஆண்டவன் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் முயற்ச்சித்து பார்ப்பது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து. பிழையிருந்தால் மன்னிக்கவும்