சச்சரவுகளுக்கு காரணம் தேடினால், முதல் காரணமாய் வார்த்தைகள் தான் இருக்கும் வாயிலிருந்து வெளிப்பட்டவுடன் காற்றிலே கரைந்து போகும் வெறும் வார்த்தைகள்.... உறவின் கசப்பை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடுத்தவரை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், வாட்டம் போக்கும் வார்த்தைகள் பேசி உறவினை வலுப்படுத்துவோம் ஊட்டம் கொடுத்து உற்சாகப் படுத்தி உயர்வடைவோம்
தேனாய் இருக்கிறது, இனிக்கிறது வேணி உங்கள் கவிதை. வார்த்தையும் அப்படியே இருந்து விட்டால் தேடி வராதோ தேனைத் தேடும் வண்டாய் வாழ்க்கையும்.
எனதன்பு ரோஜா, தித்திக்கும் தேனாய், உச்சத்தில் வானாய், இருந்ததடி உன் பின்னூட்டம். கவிதை படித்து, ரசித்து, நயமான பின்னூட்டம் நாளும் தரும் என் மலருக்கு நன்றிகள் பல
சில கவிதைகள் நமக்காகவே எழுதப் படுகின்றனவோ என தோணும். அதில் இதுவும் ஒன்று. வார்த்தைகளை வசப்படுத்தி - வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்.