இந்த ஆண்டு கோடையில் மழை பொய்க்க, வந்தது இப்பொழுது கன மழை குளிர்விக்க! இரண்டு நாட்கள் முன்பு, இரவு நேரத்திலே, திரண்டு எழுந்தன மேகங்கள் வானத்திலே! ஒரு கோடியில் துவங்கி, உருண்டு சென்று, மறு கோடியில் நின்றன, முழங்கிக்கொண்டு! துயில் கலைந்து போனால் என்ன? மக்கள் உயிர் காக்கும் குளிர் மழை வருமல்லவா? சிங்காரச் சென்னைத் தெருக்கள், மீண்டும் அங்கங்கே நிலவுப் பாதைபோல் மாறினும், 'நீரின்றி அமையாது உலகு' என்பது நிஜமே; நீரின் வரவை நினைத்து மகிழ்வது மனமே! வாகனங்கள் எழுப்பிடும் தூசியால், மங்கிய வானுயர மரங்களும் பசுமையாய் மாறிடும்! வெப்பத்தால் வெந்து வாடிய உடல்களும், வெப்பக் குறைவால் வியர்க்க மறந்திடும்! பட்டுடைகளை அணிந்து மகிழும் மகளிர், கொட்டும் மழையால் சஞ்சலம் அடைவர்! உயிர் காக்கும் மழையல்லவா நம் தேவை? உடல் அலங்கரிக்கும் உடைகள் அல்லவே!!
Hai RR, After a longtime i have entered in our beloved proud IL Site. wow well said below linesஉயிர் காக்கும் மழையல்லவா நம் தேவை? உடல் அலங்கரிக்கும் உடைகள் அல்லவே!!