விரித்த சிறகிற்கு வானம் வசப்படும் ! துணிந்த மனிதர்க்கே வாழ்வு வசப்படும் ! சிரிக்கும் பூக்களை நாமும் பறிப்பதால் , பணிந்து மொட்டுகள் விழுந்து போகுமோ ? பாதை நல்லதாய் வகுத்துக் கொள்வதால் பயணம் இனிமையாய் அமைந்து போகுமே ! பாதை தவறியே நாமும் சென்றிடின் பயணம் வெற்றியில் முடியக் கூடுமோ ? நாளை நல்லதாய் விடியுமென்று நம் நெஞ்சில் நம்பிக்கை இருந்த போதிலும் , வாளைப் பிடித்திடும் போரின் வேளையில் அஞ்சி ஓடினால் வெற்றி கிட்டுமோ ? வாழ்க்கை ஆட்டத்தில் பங்கு எடுப்பதால் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிட்டிடும் ! கோழை போலவே பயந்து ஒதுங்கிடில் கற்றுக் கொள்ள அதிலேதும் உள்ளதோ ? செய்யும் முயற்சியில் தோல்வி கிட்டினும் கிடைக்கும் அனுபவம் அறிவைக் கூட்டுமே ! வாய்ப்பை நாமுமே தட்டிக் கழித்திடில் மடையர் நாமென பிறகு வருந்துவோம் ! கவனம் யாவையும் செயலில் வைத்திட விரும்பும் யாவையும் நாமும் அடையலாம் ! நவிலும் வார்த்தையில் நேர்மை காத்திடின் கரும்பின் சாறென வாழ்வும் இனிக்குமே ! முயன்று வாழ்வதால் வெற்றி அடையலாம் ! பிறர்க்கு உதவினால் மகிழ்ச்சி காணலாம் ! உயர்ந்த நோக்குடன் நாமும் வாழ்ந்திடின் இறந்த பிறகும் புகழோடு திகழலாம் ! பிறப்பின் நோக்கமே பிறர்க்கு உதவயென புரிந்து கொண்டபின் துன்பமே இல்லை ! இறக்கும் தேதியே தெரிந்த போதிலும் இருக்கும் நாள்வரை இரங்கி வாழுவோம் ! Regards, Pavithra
Reminded of this song... kaalai ezhundhavudan naalaiya kaelvi adhu kaiyil kidaiththa pinnum thudikkudhu aavi aenenra kaelvi onrae enraikkum thangum - manidha inbathunbam edhilum kaelvidhaan minjum aarambaththil pirappum un kaiyil illai idhil aduththaduththa nadappum un kaiyil illai paadhai vaguththa pinbu bayandhenna laabam - adhil payanam nadaththividu maraindhidum paavam
Kannadaasan Kannadaasan thaan ! Indhap paadal en appavirku migavum pidiththamaana paadal ... pirarkkaaga naam azhalaam iyarkaiyil nadakkum nee pirarkkaaga unavu unna eppadi nadakkum - indha variyaich cholli , pirarukku unavalippadhai un kadamaiyaagak kolla venum endru en thandhai arivuruththuvaar ... Thank you , Vanitha , for bringing back my father's memories ... Regards, Pavithra
@PavithraS, Simply superb.Well written.Arumaiyana nadai. விரித்த சிறகிற்கு வானம் வசப்படும் ! துணிந்த மனிதர்க்கே வாழ்வு வசப்படும் ! செய்யும் முயற்சியில் தோல்வி கிட்டினும் கிடைக்கும் அனுபவம் அறிவைக் கூட்டுமே ! நவிலும் வார்த்தையில் நேர்மை காத்திடின் கரும்பின் சாறென வாழ்வும் இனிக்குமே ! பிறப்பின் நோக்கமே பிறர்க்கு உதவயென புரிந்து கொண்டபின் துன்பமே இல்லை ! இறக்கும் தேதியே தெரிந்த போதிலும் இருக்கும் நாள்வரை இரங்கி வாழுவோம் ! Superb lines.clap:clap