அன்புள்ள ஜே வீ, கவிதை மிக நன்றாக உள்ளது, அது சொல்லும் கருத்துதான் கொஞ்சம் முரணாக உள்ளது.... உறங்கும் இதயத்தை எழுப்பாதே.....உறைந்த மனதை உலுக்காதே.... பழைய நினைவுகளால் பாழ்பட்டு, உறைந்து உறங்கிக் கொண்டிருக்கும் இதயம், விழிக்காவிடின் கண்ணெதிரே திறந்திருக்கும் வழி தெரியாமலே போய்விடுமே!!! விழித்திரு - விழிப்புடன் இருக்க வேண்டும், வாய்ப்புகளுக்காக பசித்திரு - பசியுடன் இருக்க வேண்டும் புதிய கருத்துகளை அறிவதற்காக தனித்திரு - எதிலும் மற்றவர்களைப் போல அல்லாமல் தனித்தன்மை வாய்ந்தவனாக இரு இது மூன்றும் தங்கள் கவிதையில் வந்த மாதிரியே தெரியவில்லையே???? பழைய நினைவுகள் மறக்கப் பட வேண்டியவை அல்ல நண்பரே. விதைக்கப் பட வேண்டியவை. வாழ்க்கை விருட்சம் வளமாய் வளர அனுபவங்கள் உரமாகும். இவை எனது கருத்துக்கள் மட்டும் தான். தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
Mangai Veni paangudan navinraal Vaarthaigalil vannam theeti ullai Nal ninavugalai, karuththukkalai Thatti ezuppinaaldhaan Thavaru illaadha vazhkkai vazhalaam Edhirmarai karuththaiyum Ninaivugalaiyum Uranga saivom! Uraiya seivom.Sariya naan sonnadhu Anbhudan pad
spm, நன்றி. சில நினைவுகள் ஒன்றுமே செய்வதற்கில்லை. அதில் கற்ற பாடம் மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். அந்தச் சம்பவம், பாதிப்புகள் அனைத்தையும் மறப்பது கடினம், ஆனால் ஒதிக்கித்தான் ஆக வேண்டும். எனக்கு அதுபோல் நினைவுகள் மிகவும் அரிது. இருப்பினும் மனக் கட்டுப்பாடு நிறைய உண்டு. இதுவரை அமைதி நிலவி வருகிறது. பழைய பேச்சு வரும்பொழுது, அதை சட்டை செய்யாமல், ஒதுங்குவது சாலச் சிறந்தது.
உறங்கும் இதயத்தை எழுப்பாதே, உறைந்த மனதை உலுக்காதே, பல நினைவுகளில் இருந்து, மீண்டு வாழ இதுவே, சிறந்த வழி. அனைவருக்கும் ஒரு விளக்கம் தரக் கடமைப் பட்டிருக்கிறேன். இங்கு நாம் அனைவரும் அறிந்த குடும்பப் பிரச்சினைகள் பற்றி நிறைய படித்திருக்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களால் கணவன் மனைவி பிரிய நேரிடுகிறது. வாழ்க்கை அதோடு இருவருக்கும் முடிந்து விட்டதா? இல்லையே. நீங்கள் கூறுவதுபோல் அதில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்களை எடுத்துக் கொண்டு அந்த மனதை பாதித்த சம்பவத்தை தோண்டாமல், விட்டுவிடுவது தான் சிறந்தது. அதைத்தான் நான் எழுதினேன். ஆனால் சரியாக சொல்ல வில்லை என்பது தெரிகிறது. மன்னிக்கவும். ஒருவரை ஒருவர் கானும்போழுதோ, இல்லை அது பற்றி பேச்சு வரும்பொழுது ஒருவரை ஒருவர் குறை கூறி அடுத்தவரிடம் பேசுவது, இல்லை பழி வாங்கும் உணர்சிகளை தொடர்வது, இதுபோல் காரியங்களில் ஈடுபடாது நம் வழியில் செல்லலாமே என்று தான் நினைத்து எழுதினேன். இது ஒரு எடுத்துக் காட்டு தான். பல விஷயங்களில் இது பொருந்தும் என நினைக்கிறேன். திரும்பவும் தப்பாக சொல்லிவிடவில்லை என நினைக்கிறேன்.
Thanks Mallika, Veni & Pad Ma yenna oru vazhi panna try pannraanga, yaetho mudindha varai vilakkam solli irukkaen.