போர் காரணமாய் நாம் பிரிந்தாலும் என் மனம் உனையே சுற்றி வரும். ஆகையினால் என் கண்மணியே அழாது உறங்கடி பொன் மயிலே! தந்தையின் தோளினைச் சாராது நீ உறங்கியதில்லை இது வரையில். விரைவில் நான் வருவேன் தவறாது. பொறுத்துக் கொள் கண்ணே அது வரையில். உன் விழிநீர் அனைத்தையும் சேமித்து, உன் அன்னையினுடையதை நீ துடைத்து அவள் சிரிப்பதில் நீயும் மிக மகிழ்ந்து சிரித்தாலே என் மனம் மிகக் குளிர்ந்து என் பணியில் நானும் மிக முனைந்து விரைவில் செவ்வனே அதை முடித்து உனைப் பார்த்திட ஓடி வந்திடுவேன்! நாம் மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம்! குறிப்பு: போர் முனையில் இருக்கும் தந்தை தன் குழந்தைக்கு எழுதுவதாக அமைந்தது இப்பத்தி.
Beautiful poem.. P.S. I wanted to become a Doctor and serve for any of the military forces buy unfortunately couldn't.
Thanks for your appreciation Nihasvin. And I really appreciate your noble thought. Don't worry. May be, you are lined up for a bigger plan. -rgs