பழுத்த மஞ்சள் இலைகளை ஒடித்துப்போடுகிறாள் வனத்தை சுத்தம் செய்வதாக திரியும் பாவனைப்பெண். பச்சை இலைகள் துயர்மிகுந்த தலையசைப்புடன் விடைகொடுக்கின்றன. இளைப்பாற இலைதேடும் வண்ணத்துப்பூச்சிகள் வீழ்ந்து மரித்த மஞ்சள் இலைகள் மீது வந்தமர்கின்றன. பாவனைப்பெண்ணின் உடல் கணப்பொழுதில் நிறமிழந்து மண்ணில் சரிகிறது. அவள் உடலுக்குள்ளிருந்து வெளியேறுகின்றன அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்.