நெருப்பென தகித்தேன் ,நீரென வந்தாய் ! வெறுப்பை உமிழ்ந்தேன் , சிரிப்பை உதிர்த்தாய் ! இறுக்கம் புழுங்கும் இதயம் திறந்தாய் ! இரக்கம் பொழிந்து இனிமை தந்தாய் ! இருட்டில் கிடந்தேன், ஒளியாய்ப் பாய்ந்தாய் ! விரக்தி சுமந்தேன், சக்தி கொடுத்தாய் ! குயுக்தி மனதை வெல்லும் வழியைப் புகுத்தி என்னுள் மாற்றம் கொணர்ந்தாய் ! வன் புணர்ச்சியின் விளைவென உன்னைப் பிறக்கும் முன்னேக் கொல்ல நினைத்தேன் ! பிறந்து என்னை ஆட்கொண்டு விட்டாய் ! இறுகிய நெஞ்சில் தாய்மை தந்தாய் ! வலியின் விடையாய் மடியில் கிடக்கும் மலரே, மகவே, உன்னைப் பெற்றதில், உலகின் இன்பம் எல்லாம் அடைந்தேன் ! நிலவே, நிழலாய் என்றும் இருப்பேன் ! கற்பனை செய்து பேசும் சமூகம் எத்துணைப் பழித்துத் தூற்றிய போதும் அத்தனை எதிர்ப்பையும் மீறி வாழ்வேன் ! கற்பகத் தருவே, உன்னையும் காப்பேன் ! கல்வி என்னும் ஆயுதம் ஏந்திக் கொல்வேன் மூடர்கள் ஏவும் சூழ்ச்சியை ! வெல்வேன் பாதையில் எதிர்ப்படும் பகைமையை, நல்லதோர் வாழ்வைப் பரிசாய்த் தருவேன் ! இழிந்தவள் என்று பேசுவோர் நாளை அழிந்திடுவார் என் வேள்வியின் பயனால் ! அழுகையை நிறுத்தென் அழகிய சிசுவே ! விழிகளில் தெரியுது நம் வசந்தகாலம் ! Regards, Pavithra
@periamma , @iyerviji (மாமி , நலம் தானே ?) ---- உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. கணவர் தாலாட்டுப் பாடல் ஒன்று எழுதச் சொன்னார். இப்படி அமைந்தது. @jskls , @kaniths @Sairindhri , @rgsrinivasan ---- விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி , தோழமைகளே !
Inimaiyana thalattu pattu , kuzhandai pattai rasithu konde thoongi vidum. Naannalamdhan. pattu nanraga amaindhu irukku, ungal kanavanum , kuzhandaiyum kuduthu vaithavargal
மாமி , உங்கள் அன்பு நிறைந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகின்றன. எங்கள் வாழ்க்கையில் ஆண்டவன் அருளும், பெரியோர் ஆசியும் என்றும் துணை நிற்க வேண்டும், என்பதே என் நித்ய பிரார்த்தனை. என் நமஸ்காரங்கள். என்றும் அன்புடன், பவித்ரா
Its my pleasure dear, we are not going to take anything while going from here so asfar as possible be good to everyone, dont hurt anyone,appreciate and bring a smile on everyone's face that is my motto