" அட ! அட! இது நம்ம வீடு தானா , ஐந்து நட்சத்திர ஹோட்டலா ! " உள்ளே நுழைந்த ரமேஷ் ,அதிசயித்துகொண்டே தன் அலுவலக உபகரணங்களை சோபா மீது போட்டுவிட்டு, உணவு மேஜைக்கு வந்தான் . வீட்டில் எல்லாமே அதனதன் இடத்தில் அழகாக ஜோடிக்கப்பட்டு, தூசு துப்பரவு இன்றி பளிச் என்று பாலிஷ் போட்டது போல் மின்னின. திரை சீலைகள் தோய்க்க பட்டு வாசனையாக தொங்கின . பெட்ஷீட் கள் மாற்றப்பட்டு இருந்தன. கண்ணாடி ஜாடியில் புது ரோஜா கொத்து மிளிர்ந்தது . சுமதி , இடுப்புக்கு வலி நிவாரணி களிம்பு தடவிக்கொண்டு , அக்கடா என்று கிடந்தாள் . நல்ல சோர்வு. " என்னடி விஷயம், இப்படி கொலவெறியோட கிளீனிங் பண்ணி இருக்கே ? " " நாளைக்கு சுஜாதா வர்றதா போன் பன்ணினாங்க ....." " ஓஹோ ! அதானா விஷயம். ? !.." என்றவன், நினைத்து கொண்டாற்போல், தான் கட்டில் மீது போட்டிருந்த " ப்ரீப் கேசை " ஒழுங்காகக பீரோ வில் எடுத்து வைத்தான் . சுஜாதா அவனுக்கு மூத்தவள். அவளே விளம்பர மாடல் போல் இருப்பதுடன், தன் வீட்டையும் விளம்பரங்களில் வரும் காட்சிகள் போல் அத்தனை நேர்த்தியாக , அழகாக , துப்புரவாக வைத்திருப்பாள் . அவள் வரும் பொது, நம் வீடு ஏனோ தானோ என்று இருக்க பொறுக்குமா சுமதிக்கு !....அதான் மாங்கு மாங்கு என்று புது பொலிவு ஏற்றி இருக்கிறாள் ! சிரித்து கொண்டான் ரமேஷ். சுஜாதா வந்து போய் இரண்டு வாரம் கூட இல்லை, ஒரு ஞாயிறு அன்று மறுபடியும் பக்கெட் நிறைய துடைப்பம், ப்ரஷ் , டஸ்டர் போன்ற உபகரணங்கள், நாலு வித க்ளீனிங் த்ரவங்கள், பொடிகள் , பூச்சி உருண்டைகள், நறுமண ஸ்ப்ரே கள் என்று யுத்தம் செய்ய புறப்பட்டுவிட்ட மனைவியை கண்டு திகைத்தான் ரமேஷ் . " என்னடி ? மறுபடியும் சுஜாதா வராளா ?" " ரஞ்சனி வராளாம் ." ரமேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான் . ரஞ்சனி அவனுக்கு அடுத்தவள் . அக்கா வுக்கு நேர் எதிர் . ஆபீசில் கெட்டிக்காரி ; வெளி வேலை எல்லாம் நன்றாக செய்வாள் , அனால், வீட்டு பராமரிப்பு என்றால் அவளுக்கு ரொம்ப போர் ! அத்தியாவசியமானதை ,மேலோடு செய்வாள் , மற்றபடி வீட்டை மற்றவர் வியக்கும் வண்ணம் வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சுத்தமாக கிடையாது. அவள் கணவனும் எதையும் கண்டு கொள்ள மாட்டான். அவள் வீட்டுக்கு போகும் ஒவ்வொரு முறையும் , அண்ணன் என்ற சலுகையில் , எத்தனை அட்வைஸ் கொடுப்பான் ரமேஷ் ! ' நியுஸ் பேப்பரை மடித்து வைக்க கூடாதா ...வாசலில் குவிந்து கிடக்கும் செருப்புகளை ஒரு ஸ்டான்ட் வாங்கி வைக்க தோணவில்லையா ?........ஷோ கேசு ல ,எதுக்கு இத்தனை அடைசல் . .....பாத்ரூமில் பேஸ்ட் , சோப்பு பெட்டி மூடிஎல்லாம் மூலைக்கு ஒன்றாக கிடக்கே ..... சிலிண்டெர் டியூபை தொடைச்சு எத்தன நாள் ஆச்சு ?.......இப்படி ...... ஆனால்,இவற்றால் பெரிசாக எந்த மாற்றமும் ஏற்படக் காணோம் ..... "போயும் போயும் ரஞ்சனி வரான்னு , நீயேண்டி இப்படி முதுகு தண்டு தேய விழுந்து புரண்டுகிட்டு இருக்கே ?" சுமதி அவனை ஒரு முறை முறைத்தாள் . " உக்குக்ம் ! இது அவளுக்காக இல்ல, நமக்காக !" " நமக்காக வா ?" "அடுத்தவாட்டி நீங்க அவ வீட்டுக்கு போயி , சுத்தம் அது இதுன்னு அட்வைஸ் பண்ணும் போது , 'உன் வீடு மட்டும் என்ன, ஜெய்பூர் பாலஸ் மாதிரியா இருக்கு' ன்னு ஒரு வேகத்துல கேட்டுட்டான்னு வையுங்க , எங்கே போயி முகத்த மாட்டி வச்சுபீங்க ? அதான், அந்த வார்த்தைக்கு இடம் கொடுக்காம இருக்க தான் இப்படி.........சரி, சரி, சும்மா பேப்பர் படிச்சிட்டு கிடக்காம, போயி , அந்த பேஸின் னுக்கு "விம்" போட்டு வையுங்க........இங்க டஸ்ட் பண்ணிட்டு ,வந்து தேய்க்கறேன் ...:" சிரித்து கொண்டான் ரமேஷ்.
Bhuvisrini, Ravishobha, Accool, Nnarmadha, Suganyarangasam, Helpmeangel : Thank you all for liking the story.