1. உடலின் அதிர்வுகளில் நிரம்பி வழிகிறது உனக்கென நான் எழுதிய பாடல். என்னுள்ளிருந்து வெளியேறும் வெப்பம் சலசலத்தோடும் நீரோடையின் சாயலை கொண்டிருக்கிறது. தீரா இசையின் கண்ணீரில் நிறைகிறது யாக்கை. அடர்குளிரடிக்கும் கனத்த இரவில் தனித்தனியே அழுது பிரிகின்றன உதிர்ந்த நம் கனவுகள். 2. என்னை சுற்றிய வெற்றிடமெங்கும் சிறு சிறு பிம்பங்களாய் நீ உருமாறியிருக்கிறாய். ஒவ்வொரு பிம்பமும் உனது வெவ்வேறு முகங்களை அணிந்திருக்கிறது. பைத்தியநிலை முற்றிய ஒரு முகமும் வெளிறிய புன்னகையோடு ஒரு முகமும் மர்மம் சூழ்ந்த கறுப்புக்காடுகளை நினைவூட்டுகின்றன. எதற்கென்று அறியாமல் அழுதுகொண்டே இருக்கும் ஒரு முகத்தில் மட்டும் சிதறிக்கிடக்கின்றன ஒராயிரம் ரோஜாக்கள். 3. தனிமையின் இசையில் பிறக்கின்றன சிறகுகளற்ற பறவைகள் சில. அவை எழுப்பும் ஒலிக்குள்ளிருந்து வெளியேறுகின்றன வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள். பழுப்பு நிறத்தில் கடக்கும் மேகங்கள் நட்சத்திரங்களை சுமந்துபோகின்றன. ஒவ்வொரு தாளத்திற்கும் தலையசைக்கின்றன இரவுச்செடிகள். துயர்மிகுந்த இரவின் பாடலை உட்கொண்டு அருகருகே மரணிக்கின்றன நமது நாளைகள். -நிலாரசிகன்.
ungal karuthumikka kavithaigal yen tamizh arivai sothikkirathu ennavo unmay thaan. rasikkiren konjam kashtappattu. optionil skip pannavum mudiyaatha karuthugal. i am enjoying. keep going.
Bimbangalin ovvoru unnarvum, maranikkum nam naalaigalum, udhirndha kanavugalum...adhai yezhudhina vidhamum..:clap Nilarasigan! sriniketan