ரியாலிட்டி ஷோ ஜூலை 29ஆம் தேதி தனியார் டிவி ஒன்றின் ரியாலிட்டி ஷோ சென்றதின் மூலம் தான் SPB அவர்களுக்கு வைரஸ் தொற்று , அதில் கலந்துகொண்ட பலருக்கும் நோய் தொற்று : செய்தி .. 5 மாதம் பத்திரமாக வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு வந்த நிலைமை . சிம்பிள் SPB sir தன் வயதை கருத்தில் கொண்டாவது இந்த நிகழ்ச்சியினை தவிர்த்திருக்கலாம் .. மத்திய அரசு திரும்பி திரும்பி சொல்வது இதுதான் ,வயதில் மூத்தவர்கள் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள் என்று .. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரின் குடும்பம் முழுவதுவும் இப்போது மருத்துவமனையில் என்று சொல்கிறார்கள் .. ஆவணி பிறந்ததும் மூகூர்த்தம் / சுபகாரியங்கள் தொடங்கி உள்ளது .. காலனியில் கண்ணால் பார்த்தது , நேற்று ஒரு வீட்டில் காது குத்து நிகழ்ச்சி , உணவு பரிமார ஒரு சிறிய பார்க் போன்ற இடத்தில் ஏற்பாடு ,முந்திய இரவே வந்து தங்கிய கேட்டரிங் டீம் .. ஒரு பயலும் முக கவசம் அணிய வில்லை ,காலையில் பொது வழியில் இருமி துப்பி கொண்டு இருந்தார்கள் ,சத்தம் போட்ட பிறகு ரெஸ்ட் ரூம் போனார்கள் .. அவர்களே தான் பரிமாரி இருப்பார்கள் , விழாவில் பலர் பெரியவர்களும் கலந்து கொண்டார்கள் .. இதற்கு யார் பொறுப்பு ? சற்றும் நிலைமையை யோசிக்காமல் நடந்து கொண்டு இருக்கும் மாக்கள் பொது நிகழ்ச்சிகளில் இன்றைய நிலைமையில் முடிந்த வரை போகாமல் தவிர்ப்பது நல்லது . மேலும் கூப்பிட்டு வரவில்லையே என்று கோபிக்காமல் இருப்பதும் உத்தமம் . இன்னும் ஆறு மாத காலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த திருமண சடங்கு அல்லது மரண சடங்கு இவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம் . அடுத்த மார்ச் 31 வரை எந்த ஊரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருங்கள் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. Corona வேகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது நுரையீரலை சென்று தாக்கி ஆக்சிஜன் அளவை குறைத்து மரணம் அடையச் செய்யும் ஒரு கிருமி. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை பொது போக்குவரத்து தடையாக இருப்பதால் மேலும் பரவாமல் உள்ளது அதுதான் உண்மை. தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நண்பர்களே