1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரமணியின் கவிதைகள்

Discussion in 'Regional Poetry' started by saidevo, Mar 24, 2017.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
    (கலிவிருத்தம்)

    (பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

    தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
    சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன்
    அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன்
    விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்!

    [தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு;
    விடலை = பதினாறு வயதுச் சிறுவன்]

    பொருள்:
    புலவரவர்
    தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன்.
    சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன்.
    அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன்.
    சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்!

    --ரமணி, 16/03/2017

    *****
     
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சொல்விளையாடல் 2. உழல்-உழலை
    (கலிவிருத்தம்)

    உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
    சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
    அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
    கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

    [உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்;
    அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்;
    அழலை = களைப்பு;
    கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்]

    --ரமணி, 16/03/2017

    *****

    சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ்
    (கலிவிருத்தம்)

    புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
    முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில்
    எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும்
    வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

    பொருள்
    புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
    முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில்
    எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும்
    வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

    --ரமணி, 16/03/2017

    *****
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
    (கலிவிருத்தம்)

    சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
    எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
    கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
    வந்தது போக வந்தது நின்றது!

    பொருள்
    சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே
    எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில்
    கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க
    வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது!

    --ரமணி, 16/03/2017

    *****
     
    PavithraS likes this.
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே!
    (குறும்பா)
    (சிவன்: பிரதோஷத்துதி)


    ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே
    சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே
    .. கண்ணெதிரே தெரிவதெலாம்
    .. எண்ணெழுத்தாய் அறிவதனால்
    அத்தனையும் உண்மையெனக் காய்ந்தேனே. ... 1

    கற்பனையே விற்பனமாய்க் கொண்டேனே
    அற்பமெலாம் அற்புதமாய்க் கண்டேனே
    .. ஆன்மவொளி பேணேனே
    .. பான்மையதில் காணேனே
    சிற்சபையின் சன்னிதியை அண்டேனே. ... 2

    அஞ்செழுத்துக் காதொலிக்கும் நேரமெலாம்
    நெஞ்செனிலே ஏதேதோ வேருறுமே
    .. வேதவொலிப் பண்ணிசையில்
    .. காதலிலே கண்ணசையும்
    கொஞ்சமேனும் ஏற்றமிலாச் சீரழிவே. ... 3

    மூவறமும் நிலைநிற்கும் வாழ்வினிலே
    ஆவதெலாம் ஆனதெனும் தாழ்வினிலே
    .. முத்திநிலை நாடேனே
    .. அத்தனுனைத் தேடேனே
    போவதுவும் வருவதுவும் ஊழ்வினையோ? ... 4

    கத்துகடல் நஞ்செடுத்தே உண்டவனே
    முத்தெனக்க ழுத்தினிலே கொண்டவனே
    .. என்னுளத்தில் தெளிவுறவே
    .. உன்னுருவின் ஒளியருளே
    சத்தியத்தின் தத்துவமாய் நின்றவனே. ... 5

    --ரமணி, 01/12/2017

    *****
     
    periamma and PavithraS like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஐயா,வருக ! மீண்டும் கவிமழை பொழிக ! வழமையே போல் இக்குறும்பாவில் பதிந்த இறைச்சிந்தனையும்,சொற்றிறமும் அருமை,இனிமை ! மிக்க மகிழ்ச்சி,நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    saidevo and periamma like this.
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    #ரமணி_கார்த்திகை
    கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து
    (கும்மிப் பாடல்)

    வானைய ளாவியே பூமியில் ஆழ்ந்திடும்
    . வன்னெடுஞ் சோதியாய் அண்ணலெழ
    ஏனென்று மாலயன் தாள்முடி தேடியே
    . ஏதும்கா ணாதருள் பெற்றதினம்
    ஊனையு ருக்கியே உள்ளொளி தந்திட
    . ஊரெங்கும் தீபத்தை யேற்றிவைப்போம்
    கானமும் பாடியே கைத்தாளம் கொட்டியே
    . கால்நடம் செய்யவே கும்மியடி! ... 1

    கார்த்திகை மாதரும் பாவகி யாய்வந்த
    . கந்த னுருவாறும் பேணிடவே
    பார்வதி கண்ணுற்றே ஆறுமு கத்தையோர்
    . பாலனாய் சேர்த்தன்னை யானதினம்
    ஆரியை சக்தியாய் ஆர்த்தெரு மைத்தலை
    . தானவ னைக்கொன்று காத்திடவே
    ஆரணன் அன்னையைத் தன்னுடல் சேர்த்தவன்
    . அர்த்தநா ரீசனாய் ஆனதினம்! ... 2

    குத்துவி ளக்ககல் தீபங்கள் வீடெங்கும்
    . கூர்ச்சுடர் வீசவே ஏற்றிவைப்போம்
    நத்திந மக்கினி மைதரும் பண்டங்கள்
    . நைவேத்தி யம்செய்தே உண்டிடுவோம்
    இத்தரை மீதுயிர் யாவையும் நற்கதி
    . இவ்வொளி யில்பெற்று வாழநாமும்
    சித்த மொளிபெற்றே சின்னத்த னம்விட்டுச்
    . சின்மயம் காணவே கும்மியடி! ... 3

    --ரமணி, 05/12/2014, கலி.19/08/5115

    Deepam Legends
    A R U N A C H A L A S A M U D R A - Karthigai - Narratives - Deepam Legends
    Significance of Karthigai Deepam

    *****
     
    periamma and PavithraS like this.
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!
    (அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி)

    ஆட்டுவித் தாலும் ஆடாத
    . அகமென தாகில் என்செய்வேன்
    கூட்டுவித் தாலும் கூடாத
    . குணமென தாகில் என்செய்வேன்
    தேட்டுவித் தாலும் தேடாத
    . தினவென தாகில் என்செய்வேன்
    ஓட்டுவித் தாலும் ஓடாத
    . ஒட்டுத லாகில் என்செய்வேன்? ... 1

    காட்டுவித் தாலும் காணாத
    . கல்மன மாகில் என்செய்வேன்
    பாட்டுவித் தாலும் பாடாத
    . பண்பென தாகில் என்செய்வேன்
    நாட்டுவித் தாலும் நாடாத
    . நலிவென தாகில் என்செய்வேன்
    பூட்டுவித் தாலும் பூட்டாத
    . புத்தியைக் கொண்டேன் என்செய்வேன்? ... 2

    இவ்விதம் என்னை இயக்குவதும்
    . ஈசர்-உம் செயலாய் எண்ணுவதோ
    செவ்விதின் என்னைச் செப்பனிடும்
    . திருவுளம் இந்நாள் உமக்கிலையோ
    வெவ்வினை சூழ வாழ்வதுதான்
    . விதியெனக் கென்றே சொல்வீரோ
    எவ்வித மெனினும் காத்திருப்பேன்
    . எண்குணன் என்னை ஆட்கொளவே! ... 3

    --ரமணி, 15/12/2017

    *****
     
    periamma and PavithraS like this.

Share This Page