உன் பூவிதலின் எச்சில் பனித்துளியாய் உறைந்து போனது என் கன்னத்தில் .... உன் அணைப்பின் வெப்பம் வேண்டி யாசிக்கறது என் நெஞ்சு ... நீ விளையாடிய பொம்மைகள் வாய் மூடி மௌனம் ஆனது என்னை போல் ... கேட்பாரற்று கிடக்கும் உன் சாக்லேட்கள் எறும்புக்கு உணவாகி கொண்டு இருகின்றன ... உன் அழுகையும் சிரிப்பும் இன்றி மயானமாய் இருக்கிறது இந்த வீடு .... உன் குரலை கேட்க டிவி யை கூட அணைத்து வைத்திருக்கிறேன் கூப்பிட நீயில்லை ... யோசிக்காமலே முடிவெடுத்தேன் உன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று .......