1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-38!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 23, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உண்மையில் சிவா சொன்னது உணர்ந்து தானா என்றே கிஷோருக்கு சந்தேகம் வந்துவிட்டது.அவனிடமே அதை கேட்டான்.
    "சிவா... நீங்கள் என்ன பேசிகிறோம் என்று தெரிந்து தான் சொல்கிறீர்களா?"

    "ஹா..எல்லாம் புரிந்து உணர்ந்து தெரிந்து தான் சொல்கிறேன். நீ செய்த தவறுக்கு பரிகாரமும் தண்டனையும் இது தான். வந்தவுடன் உன்னை அங்கு அழைத்து செல்லாதது, நீ அந்த தண்டனையை உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் தான். வானதியின் நடமாட்டத்தை கவனித்தாலே நீ செய்த தவறை உணர்வாய் என்று தான் இந்த ஒரு வார அவகாசம். இனி பேச எதுவுமில்லை. உனக்கு விருப்பம் இல்லையென்றால் இப்போதே இங்கிருந்து செல்லலாம்."

    பேச்சை முடித்துக்கொண்டு அவன் சென்றுவிட்டான்.வானதிக்கு எதுவும் பேச தோன்றவில்லை என்பதை விட, அவள் இதில் சொல்ல எதுவும் இல்லை என்று தோன்றியது.

    கிஷோர் அன்று முழுவதும் யோசித்தான். அவனுக்கு இதில் எந்த தவறும் தெரியவில்லை தான். பார்க்கப்போனால், செய்த பாவத்துக்கு சரியான பரிகாரமாய் அவனுக்கும் இது சரியென்றே தோன்றியது. ஆனால்....

    அன்று மாலை மூவரும் சேர்ந்து விமலனின் வீட்டுக்கு சென்றனர்.. அவர்கள் மூவரையும் ஒன்றாக பார்த்த வான்முகிலுக்கு கிஷோரை அடையாளம் தெரியவில்லை. இதற்கு முன்பு அவள் அவனை பார்த்தது இல்லை. வானதி சிவாவோடா இருந்தாள்?? அவள் எப்படி இங்கே??

    உள்ளிருந்து வந்த விமல் கண்டுக்கொண்டான். ஆனால் எதுவும் நடக்காததை போல உள்ளே அழைத்தான். சிவா கம்பீரமாய் வந்து சோபாவில் அமர்ந்தான். "முகில், உள்ளே போய் எங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா..."
    அவனின் அமர்த்தலான பேச்சை கேட்ட மற்றவர்கள் எல்லாம் திகைத்தனர் என்றால், முகிலுக்கோ எரிச்சலாய் இருந்தது. அது என்ன... எப்போதும் தன்னை மட்டும் உள்ளே அனுப்புவது? ஏன் நான் கேக்க கூடாதாமா?

    ஆனாலும் உள்ளே சென்றாள். திரும்பி வந்து எல்லாம் முடிந்தபின் சிவா பேசியதே முகிலிடம் தான். "முகில், என்ன எதுவும் பேசாமல் இருக்கிறாய்? அதுவும் கிஷோரை பார்த்த பிறகும் கூட? ஏன்... அவனே பேச்சை தொடங்கட்டும் என்று காத்திருக்கிறாயா?"

    விமல் ஆச்சர்யமாய் முகிலைப் பார்த்தான்.முகிலுக்கு விழிப்பதை தவிர ஒன்றும் புரியவில்லை.யார் கிஷோர்? இந்த புதியவனா? அவன் யாரென்றே தெரியாது... பிறகு எப்படி பேசுவது?

    "யா..யார் அண்ணா கிஷோர்? இவரா? இவர் யார்?"

    சிவா நகைப்பினூடே பதில் சொன்னான். "என்ன முகில்... வேஷம் களைந்து விடுமே என்று பயப்படுகிறாயா?"

    முகில் திகைத்தாள்...."எ..என்ன வேஷம்? எனக்கு புரியவில்லை... ஐயோ.. தெளிவாக தான் சொல்லேன்." அழுதுவிடுவாள் போல கெஞ்சினாள்.

    சிவா கோபப்படுவது போல பார்த்தான்..."எது புரியவில்லை? நான் வேண்டாம் என்று தடுத்தும் இவனை காதலித்ததா? அதை என்னிடமிருந்து மறைத்ததா? இப்போதும் இவன் யாரென்றே தெரியாதது போல நடிப்பதா? இல்லை... எப்படி எல்லா உண்மையும் எங்களுக்கு தெரியும் என்றா? எது புரியவில்லை உனக்கு? சொல்லு.."

    விமலன் காலில் சுடு தண்ணீர் கொட்டிவிட்டதை போல திடுக்கென்று எழுந்தான்... சிவா இப்போது விமல் பக்கம் திரும்பினான்... "விமல், நீ நினைப்பது போல கிஷோரும் வானதியும் காதலர்கள் இல்லை. உண்மையை கிஷோரின் வாயாலே சொல்லக்கேட்டால் தான் உனக்கும் நம்பிக்கை வரும். கிஷோர், நீயே சொல்."

    "விமல் சார், சிவா சொல்வது தான் உண்மை... நீங்கள் எல்லாரும் நினைப்பது போல நானும் வானதியும் காதலர்கள் இல்லை. வானதியோடு முகில் தான் எப்போதும் கல்லூரிக்கு வருவாள். அவளை எனக்கு மிகவும் பிடித்து போய், அவளிடம் காதலை சொன்னேன். முதலில் அண்ணனுக்காக மறுத்தவள் பிறகு ஒத்துக்கொண்டாள். ஆனால் நீங்கள் வந்த பிறகு எல்லாமே மாறி போனது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் விலக தொடங்கினாள். அவளை எப்படியாவது என்னுடம் சேர்த்து வைக்க தான், வானதியும் நானும் அப்படி செய்தோம். அந்த புகைப்படங்களை பார்த்த பிறகாவது நீங்கள் முகிலை விட்டுவிட்டால் அவள் எனக்கே சொந்தமாவாள் என்று நான் தான் வானதியிடம் சொன்னேன். முகில் அப்படி என்னோடு சேர்ந்து எந்த படமும் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தான் நாங்களே ஒரு படத்தை உருவாக்க வேண்டியதாகி விட்டது. இதில் முகிலும் வானதியும் அறியாதவர்கள். நான் தான் அவர்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டேன்."

    கிஷோர் மீண்டும் மீண்டும் பாவமே செய்கிறோமோ என்று சொல்லிக்கொடுத்ததை ஒப்பித்துவிட்டு தலைக்குனிந்து நின்றான். கண்ணீரோடு கையாலாகாமல் எல்லாவற்றையும் மௌனமாய் பார்த்துக்கொண்டு நின்றாள் வானதி..

    முகிலின் கண்கள் மட்டும் தன் அண்ணனிடம் நியாயம் கேட்டு உறைந்தது. சிவா தன் கண்களாலேயே பதில் சொன்னான்... "உனக்கான நேரம் முடிந்தது."
     
    Last edited: Nov 23, 2010
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Ada ada ada enna oru super dooper twist...intha master planaiya Siva solli kuduthaan kishorekku..achicho ipo enna nadakkap poguthu iduku Vimal reaction enna???

    Epavum edavadoru suspense vechu mudichidu priya :rant:rant
     
  3. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Mugiluku nadakurathu aniyayam. Ithula irunthu ava epdi velila vara pora?
    vimal nambuvana avala? siva thangachiya vitu kudakalama?
     
  4. puss

    puss New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Mugil Paavam. Thappu Panni thirundina, Vaanadi paavama?. Mugil Thappe pannama en kasta padanum.
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya nalla twist.. Paavam Mugil..
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Deva
    enna ippdi oru thirupam koduthirukke.....
    thikku thikkunu irukke...
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kadesila mugil ah thapa maativitutiya!!!:rant
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வானதி வாயினாலே குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க போகிறார்களா தாத்தாவும் சிவாவும்.தாத்தா எப்ப என்ட்ரி ஆகிறார் ப்ரியா.
     
    Last edited: Nov 24, 2010
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    achachoooooooooooo..paavam mukil....
    thappu pannuna vaanathiya vittutu yen ippadi ellorum sernthu mukil a koduma panraanga....??????

    enna nadakkap poguthu nu theriya romba aavala irukku.....(mavale..mukil ku saathagama theerpu solra.....illai na unna undu illai nu panniruven...:hide:)......

    waiting for next part deva......quick quick......:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflSuspense eh illama muduchatha nenachene....
     

Share This Page