முடை உண்டோ? தடை உண்டோ? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? முடவன் கொம்புத் தேனுக்கு ஏன் ஆசைப் படக் கூடாது? மரத்தில் ஏறித்தான் கொம்புத் தேனை அடைய வேண்டுமா? அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கி ஆசை தீர சாப்பிடலாமே! தேனினும் சுவை நம் ஆறாவது அறிவை அறிந்து பயன் படுத்துதலே! யோசி மாத்தி யோசி அனைத்தும் எட்டும் தூரத்திலே கிட்டும் கையினிலே! கொம்புத் தேனுக்கு முடை உண்டோ? அது கிடைக்கத் தான் தடை உண்டோ?
Superb Nats. Thadaikku thada potta ungalukku oru Jey. Indraya ilainjargalukku ookkam tharum nal varigal. ganges
நட்ஸ், பழமொழிகளில் உள்ள குறைகளை நன்றாக சுட்டி காட்டுகின்றீர்கள் உங்கள் கவிதைகளில் . ஒருவேளை இந்த பழமொழி நடைமுறைக்கு வந்த காலத்தில் , தேன் கிடைப்பது அரிதாக இருந்திருக்குமோ. இல்லை விலை உயர்ந்ததாக இருந்திருக்குமோ ??? இக்காலத்திற்கு இப்பழமொழிகள் ஒத்துவராது என்பதையும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதையும் அற்புதமாக சொல்லி இருக்குறீர்கள் .thumbsup
நட்ஸ் நீங்கள் குறிப்பிட்ட பழமொழி சொல்லப் பட்டது முடவனுக்கு(முடியாதவனுக்கு) ஆனால் நீங்கள் சொல்லி இருப்பதோ கால்கள் இருபவனுக்கு(முடியுமானவனுக்கு). மனதளவில் முடவனே முடவன் ஏனையவன் மனிதனே. உண்மையில் முடவனாக இருப்பவன் கூட ஒரு பாரம் தூக்கியில் அமர்ந்து கொண்டால் கொம்புத் தேனுக்கென்ன கோபுரத் தேனுக்கே ஆசைப்படலாம்!!!....முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!!!! முடையாவது தடையாவது. எல்லாவற்றையும் உடைத்து எறிந்து முயன்று பார்த்தால் கூடை நிறைய தேன்.....தித்திக்கும் வாழ்க்கை. நான் சொல்வதுசரி தானே நண்பரே!!!!!
முடவனுக்கு கால்தான் இல்லை கையுமா இல்லை கல்லெறியக் கற்றுக்கொண்டால் கொம்பு தேனும் கைக்கு வரும் மாத்தி யோசிக்கச்சொல்லி சோம்பேறி ஆக்காதிங்க நட்ஸ்
ஆசைக்கு தகுதி தடை அல்ல முயற்சி இருந்தால் போதும் அப்டீன்ற கருத்தை நச்சுன்னு சொன்ன உங்கள் வரிகளுக்கு clapBow:hatsoff