மஹாகவி பாரதி - (வஞ்சித்துறை) பார்த்தனுக்கோர் சாரதி பைந்தமிழுக்கோர் பாரதி ஆர்ப்பரிக்கும் பாடல்களுக்கு அரசனாவான் பாரதி திருவல்லிக் கேணியிலே தமிழ்மகன் வாழ்ந்ததுவே பெருமையிந்த புலவனுக்கு கருவமிந்த கவிஞனுக்கு தமிழாலே பலர்வளர தமிழவனால் வளர்ந்ததுவே அழிவிலாத சிரஞ்சீவிக் கவிதைகளும் மலர்ந்ததுவே அவன்தமிழைப் படித்துதான் என்தமிழைநான் அறிவேன் தவறிலாத தமிழ்க்கற்று தந்ததையும் நான்மறவேன் கலைமகளின் தலைமகனின் கவிச்சொத்தைக் காத்திடுவோம் இணையிலாத மாகவியை உளம்வைத்து போற்றிடுவோம் வீயார்