அதோ பொழிகிறது மழை, அற்புதம் ! இதோ எழுகிறது மண்வாசம், ஆனந்தம் ! கட்டறுந்து வழிகிறது என்னுள், இன்பம் ! சட்டென விழிக்கிறது நெஞ்சில், ஈர்ப்பு ! நாசியேறும் வாசம் நுகர, உவகை ! வீசுகாற்றின் குளிர்ச்சி நாடி, ஊர்வலம் ! மழையில் ஆட ஊற்றெடுக்கும், எண்ணம் ! குழையும் மனதில் பிள்ளைப்பருவ, ஏக்கம் ! தித்திக்கும் மழைச்சுவை அறியீரோ, ஐயோ ! முத்தமிடும் மழலையும், மழையும்,ஒன்றே ! இரண்டும் எழில் கொஞ்சும், ஓவியம் ! இரங்கி நமக்கருள் செய்யும், ஒளடதம் ! Regards, Pavithra
அற்புத அருமை மழை ஆனந்த மழை இன்ப மழை ஈரக்கும் மழை உயிரை ஊடுருவும் இன்ப மழை எங்கள் பவித்ராவின் கவிதை மழை!