1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Nov 28, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட
    வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை
    அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை !
    --------------------------------------------------------------------------------------------------
    மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    'போட்'டினில் பின் செல்பவர்
    ----------
    வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
    வேளச்சேரியில் வீடு கட்டியோர்
    ---------------------
    மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்...இளைத்தார்
    கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
    -------------------------
    நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
    ஜலம் உள்ளே வருமாவென !
    -----------------------------
    சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
    மின்சாரம் போயினும் அஃதே !
    -------------------------
    வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
    உள்ளத்தோர் உதவா விடின்
    ----------------------------
    நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
    ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
    ---------------------------------
    ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
    நாறிடும் பிழைப்பு என்றறி.
    ----------------------------------------------
    தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
    தண்ணீரே நுழைந்தது பார்,
    ----------------------------------------------
    ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
    நாஸ்தி ஆனதே சோகம்
    ------------------------------------------------------------
    இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
    பொருள்கள் பாழாகும் நிலை.

    படித்து ரசித்தது....
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
    Loading...

Share This Page