மலர்மாலை உனக்கு மலர்ப்பாதம் எமக்கு நறுமணம் கமழும் மலர்மாலை நாங்கள் உனக்குச் சாற்றிடுவோம் கருணைக் கண்மலர் திறந்திடுநீ காத்திடுவாயே ஸாயி ராம் மல்லிகை மாலைச் சாற்றிடுவோம் தொல்லைகள் நீக்கிக் காத்திடுவாய் தாமரை கொண்டுனைப் பூசிப்போம் ஆயிரம் இதழில் மலர்ந்திடுவாய் சம்பங்கி நாங்கள் சாற்றிடுவோம் துன்பங்கள் நீக்கிக் காத்திடுவாய் தாழம் பூவால் தொழுதிடுவோம் வாழ்வில் ஒளியை ஏற்றிடுவாய் மகிழம் பூவைச் சாற்றிடுவோம் மகிழ்வை எமக்கு அளித்திடுவாய் மனோ ரஞ்சிதம் சாற்றிடுவோம் மனோ ரதம்நிறை வேற்றிடுவாய் மருக்கொழுந்தால் நாம் பூசிப்போம் திருவடி தரிசனம் தந்திடுவாய் மந்தா ரையினைச் சாற்றிடுவோம் எந்தாய் எம்மைக் காத்திடுவாய் செம்பகப் பூவால் பூசிப்போம் நம்பிக்கை நீயும் தந்திடுவாய் பிச்சிப் பூவால் போற்றிடுவோம் இச்சைகள் நீயும் போக்கிடுவாய் மரமலர் கொண்டு பூசிப்போம் அறவழி எமக்குக் காட்டிடுவாய் மனமலர் கொண்டு பூசிப்போம் தினமும் எம்மைக் காத்திடுவாய் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்