சண்டை வார்த்தை தவற… என் வாழ்க்கை தவறிடுமா? வருந்திக் கிடக்கிறேன் நான்… உன்னை காயப்படுத்தினாலும், மழை நின்றும் துளி சொட்டும் கூரையாய்… உன் நினைவுத் துளி சொட்டுகிறது என்னுள்!! மன்னித்து விடுவாயா அன்பே.... உன் கோபத்தை விட உன் மௌனம் சுடுகிறது என்னை.... தவறு குற்றம் குறைப் பார்வையில்லை மிரட்டும் செயல்களும் இல்லை சுடும் கடுஞ் சொற்களில்லை கட்டி அடிக்கவும் இல்லை தனல் பறக்கும் கோபமில்லை ஏன் இப்படி செய்தாய் என உன் விழிகள் நனைந்ததே.. இன்னொரு முறை செய்வேனா சிறு தவறையும் நான்!!