சம்பளமில்லை சன்மானமுமில்லை தோழ்தட்டி தேற்றுவார் எவருமில்லை பின் எதற்க்காக ஒப்புக் கொண்டான் இந்த ஒருதலை காதல் உத்தியோகம் செய்ய? வாந்தி போலும் வயிற்றுப்போக்குப் போலும் அனுதினமும் தனிமையில் அவன் புலம்பல்கள் ஒருமுறை மட்டும் தானே உட்க்கொண்டான் ஒருதலை காதல் என்னும் அரைவேட்காட்டை? வாய்ஜால வல்லவனாம் அவன் ஆனால் தன் ஒருதலை காதலை அவள் முன் நின்று வாசிக்ககூட வக்கிலையோ அவனுக்கு? ஒருதலை காதல் என்னும் இந்த பேறு தராத கர்ப்ப வேதனையில் கண்ணீர்கூட கண்களுக்கு தெரியாமல் ஆவியாய் தான் போகுமோ? குறத்தி பெண் மேல் கொண்ட ஒருதலை காதலை மறக்க வேண்டும் என நினைவில் நிறுத்தியே நிண்ட அவன் இரவுகளின் நித்திரை பஞ்சம் போக்க நிவாரண திட்டம் ஏதும் உண்டோ? மரணமும் அவன் கல்லறை மேல் நின்று ஏளனம் செய்யுமோ அவன் ஒருதலை மலட்டுக் காதலை பார்த்து? *thanks for ignoring the spelling errors
சரியான விளக்கம் ஒரு தலை காதலுக்கு.. பாடாய் படுத்தும் அல்லவா அது..பாவம் பையன். இது தெரியாமல் வீழ்ந்து விட்டானே கடைசியில் :-( Sriniketan