உன் பளிச்சிடும் விழிகள் கண்டு "நீ சூரியப் பெண்ணோ?" என்றேன். நான் என்றாவது உன்னைச் சுட்டு இருக்கிறேனோ? என்று கோபித்தாய். உன் அண்மையின் தண்மை கண்டு "என் நிலவுப் பெண்ணே!" என்றேன். "நான் ஒரு நாள் வராததை இன்று நீ சுட்டிக் காட்டாதே!" என்றாய். "என்னுள்ளே எங்கும் படர்ந்து வானம் போல் நின்றாய்!" என்றேன். "இல்லாததைச் சொல்லிக் கொண்டு நீ காலம் கடத்தாதே!" என்றாய்! "எதைச் சொன்னாலும் உடன் எனை மடக்கி எனைக் கொண்டாய் கண்ணே!" என்றேன். அரிதான உன் புன்னகையைக் காட்டி, எனை மறுபடி மயக்கிச் சென்றாய்!