இன்றும் ரத்த முகாமில் கூடும் கூட்டம் பார்க்கையில், மாதச் சம்பளத்தில் கொஞ்சம் ஒதுக்கி நன்கொடை அளிக்கையில், பெரிதாய் அழிக்கும் இயற்க்கை சீரழிவு கண்டு கலங்குகையில், கடக்கும் அவசர ஊர்தி அவசரம் பார்த்து ஒதுங்கி நிற்கையில், மழையில் நனைபவர், ஒதுங்கி கொள்ள கொஞ்சம் நகர்ந்து நிற்கையில், எல்லையில் வீரர்கள் நீத்த உயிர்கள் எண்ணி கண்ணீர் சிந்துகையில், சிக்னலில் பிச்சை கேட்கும் சின்ன உயிர் கண்டு நோகையில், நாகையில் வீசிய சுனாமி எண்ணி இன்றும் கரைகையில், இன்னோர் மனித உயிர் எங்கோ வதைபட அதை கண்டு துடிக்கையில், அழுத்தமாய் தான் தோன்றும் எண்ணம்...... இன்னும் சாகவில்லை மனித நேயம்...
நிமிடத்துக்கு ஒரு முறை நிறம் மாறும், நிலை மாற்றும் இந்த மானுடத்தில் பூக்கட்டும் தரமான நேயம் மனித இதயத்தில். மலர்ந்த மனித நேயம் தருவிக்கட்டும் தரமான மனிதர்களை... பண்பான படிப்பினை வரிகள் ரம்யா.
எளிதும், அரியதுமாய் உதவிகள் செய்யும், சிறிதும் பெரிதுமான மனிதர்கள் செயலில், இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் உங்கள் மேலான எண்ணத்தை வார்த்தைகளால் சொன்னீர்கள். நன்றி. கவிதையும் கருத்தும் மிக நன்று. வாழ்த்துக்கள். -ஸ்ரீ
Ramya, Chinna chinna vishayangala note panni azhaga sonneenga. unmaithaan. purinthu kollum manam irukkum varai manitha neyam kandippa saagaathu.:thumbsup