உன் துறுதுறு பார்வை என்னை மயக்குகிறதே உன் குறும்பு சிரிப்பு என்னை கொள்ளை கொள்கிறதே கனவில் தொடர்ந்து வரும் சின்ன கள்வனே ஒருமுறையேனும் நினைவில் உன்னை அள்ளி அணைக்க ஆசை ! மிருதுவான உன் சிகை வருட ஆசை என் கையால் சுவையான அமுதூட்ட ஆசை உன் குறும்புகளை தாளாது உன்னை கட்டிவைக்க ஆசை அயர்ந்து நீ உறங்க என் மடி தர ஆசை மனம் கவர் கண்ணனே ஒரு நாளேனும் உனக்கு நான் யசோதையாய் மாற ஆசை ! @periamma உங்க கண்ணன் படத்திற்கு நன்றி
Very nice, Lakshmi ! You already are Yasodha,as the poem reflects and resonates with deep faith and love for Him, the Chinnak Kannan.
லக்ஷ்மி கண்ணனை ஒரு குழந்தையாக தாலாட்ட நினைக்காத அன்னையரே இல்லை .நீங்கள் பாட்டியாகும் போது அந்த ஆசை நிறைவேறும்