பாசமும் நேசமும் நிறைந்த பெட்டகத்தை மனப் பெட்டகத்தை பூட்டி வைத்து பாதுகாத்தேன் துன்பங்களை என்னுள்ளே புதைத்து வைத்ததால் பெட்டகம் கனத்தது வலித்தது தாங்க முடியாமல் தவித்தேன் சாவியை தேடினேன் கிடைக்கவில்லை அலைந்து திரிந்தேன் அவலப் பட்டேன் துன்பத்தால் இறுகிய மனதை உடைத்தேன் தகர்த்தேன் வலி குறைந்தது வாழ ஆரம்பித்தேன்
லக்ஷ்மி வேண்டுதலுக்கு மிக்க நன்றி .தனியே இருக்க முடியாமல் தான் மீண்டும் உங்கள் அனைவருடனும் சேர்ந்து இருக்க வந்து விட்டேன் .
சருகான போதும் உரமாக மாற விரும்புகின்ற தாங்கள் சோகப் படலாமா ? தரமான மனிதர்க்கு சுகமும், சோகமும் ஒருபொருட்டல்ல ! மனதைப் பண்படுத்தும் இறை விளையாட்டன்றோ ? வலியேற்கும் கற்கள் உளி தாக்கினாலும் சிலையாகிக் கருவறையில் நிலையாக நிற்கும் ! வலியேற்கும் நெஞ்சமே இறைவாழும் ஆலயம் ! நிலைக்காத வாழ்விது, சோகமேன் கொள்வது ? சிரிக்கவும் மறக்கவும் பழகி விட்டால் இருக்கும் வரை ஆனந்தமாய் வாழலாம் ! மறப்பதோடு மன்னிக்கவும் தெரிந்து விட்டால் இறந்த பின்பு இறைவனோடு கலக்கலாம் !
கருவரை கலங்காது சுமப்பவளுக்கு கண் கலங்கி நீர் சிந்துவது சுமயை இறக்கும் வரையே உச்சி முகர்ந்து தன் உதிரம் உணர்கையிலே ஓடிடுமே வலி அனைத்துமே