மரங்கொத்தியாய் என் மனம் கொத்திப் போனவள் இன்றும் வந்தாள் அவள் மிச்சம் வைத்த என் உயிரையும் கொத்திப் போக... என்னில் இல்லை மாற்றம் அவள் கண்ணிலும் இல்லை மாற்றம். நான் மீண்டும் தயாராய் காயம் படவும், மறுத்து அவள் மனத்தைக் காயப்படுத்த மனம் இல்லாததால்...
மரங்கொத்தி, மனம் கொத்த, மனம் ஒப்ப வந்ததே உறவு, உயிர் கொத்த வந்ததாய் நினைத்து, காயம் பட காதல் மனம் தயாராவது, இதயத்தை அன்றோ பதம் பார்க்குது, வாய் விட்டுப் பேசினால் நோய் விட்டுச் செல்லுமே.....
மிச்சம் வைத்து மீந்ததை கொடுத்தது உன் தவறு இருப்பதை எடுக்க அவள் அறிந்த மார்க்கம் மனம் கொத்தல். மொத்தமாய் துடைத்து கொடுத்திடு கொத்தல் பொத்தல் இல்லை ....கோர்த்தல் ஆகிவிடும். முழுவதும் உனக்கே அவள் வெகுமதி சிறப்பே காயம் அது மாயம் காதல் அது மையம் மயம் எல்லாம் அன்பு மயம்!!!!!!!
manangkothiyaai vanthaval kothi sendrathu avanin santhosathayum thaano.... arumayaana varigal veni....:thumbsup
அன்புள்ள ஜே வீ, கொத்தியதில் காயம் பட்ட மனதுக்கு தெரியும், அதன் வலி என்னவென்று. கத்தியின் பதம் பார்க்க, உயிரையா குத்திப் பார்க்க வேண்டும்?? பேசிப் பேசிப், பேசிய காலங்கள் தான் வீணாய்ப் போனது. நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு (கவிதையே கற்பனை, இதில் நான் எத்தனைதான் கற்பனை செய்து சொல்வதுWitsend)