மந்திரம் தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லை யோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, சாதி மத பேதம் அற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் என பிரார்த்தனை செய்ய சொல்கிறது நமது சாஸ்திரம். அவ்வாறே கடைப்பிடித்து நலம் பெறலாம்.