உன்னை போல் என்னால் வாழ முடியாது என்னை போல் உன்னால் வாழ முடியாது பின் ஏன் இந்த போட்டி பொறாமை ஏன் இந்த கோப தாபங்கள் உன்னிடம் உள்ள நல்லதை நானும் என்னிடம் உள்ள நல்லதை நீயும் எடுத்து கொண்டு வாழ்ந்தால் கிடைக்கும் ஆனந்தம் கோடானு கோடி நல்லதை செய்வதில் போட்டி வேண்டும் கல்வி கற்பதில் போட்டி வேண்டும் உதவி செய்வதில் போட்டி வேண்டும் கோடி சம்பாதிப்பதில் போட்டி வேண்டாம்
எதற்கு வேண்டுமோ அதற்கு மட்டும் போட்டி போடுவதை விட்டு இன்று பலர் வேண்டாததற்குதான் போட்டி போட்டு வாழ்வினை வருத்தி கொண்டு இருகிறார்கள். அம்மா அருமையான வரிகள்..அழகாக சொன்னீர்கள்.:thumbsup
போட்டி இல்லாத மனிதர்களை இனி காண்பது மிக அரிதான ஒன்று அம்மா....நிமிடங்களில் இருந்த போட்டி இப்போது வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் வந்து நிற்கிறது
ஒரு வாழ்வு அதை முடிபதற்குள் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்..... பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் சிறிது பேசி பழக தடை உறவினரிடம் உற்சாகமாக உரையாட தடை காரணம் தேவை இல்லாத போட்டி ஆனால் இது தீராது கவிதை எழுதி நம் மன சுமையை வேண்டுமானால் போக்கி கொள்ளலாம்...... அருமையான கவிதை அம்மா