நாதம் வேண்டி நாதன் நோக்கி நிற்க, பார்வை வேண்டி பாவை நீ தவிக்க, காதல் வேண்டி இதயம் துடிக்க, காதல் சொல்லத் துணிந்தாயா நீ? துணியாத நீ பொழுதெல்லாம், புலம்பினாலும் பயனில்லை....... வாழ்க்கைப் பயணத்தில் அவனுடன் பயணிக்க, வாய் திற அவனிடம், சொல்லாமல் சொல்லிச் செல் உன் காதலை, மெய்மறப்பான், பொழுதெல்லாம் அவனிருப்பான் உன் பின்னாலே, என்றும் நன்னாளே......