சமுதாயத்தில் கற்றுயர்ந்தோம் சரித்திரத்தைப் படைத்தோம் சார்ந்து வாழும் கலையறிந்தோம் சகோதரர்களாய் வாழ்ந்திருந்தோம் பார்க்கவும் பேசவும் வினையாற்றவும் பொதுவான பல இடங்கள் காலங்கள் பழக்கங்கள் மறந்து வருகிறோம் பார்க்காமல் பழகி பகிர்ந்து உருகி பொய் சமுதாயங்கள் உருவாக்கினோம் பொழுதுக்கும் அத்தளங்களை நாடி பறக்கிறோம் புது சமுதாய வானிலே புரியவில்லை போக்கும் அதன் இலக்கும்
பொய் சமுதாயம் என்பதை விட புதிய சமுதாயம் என்று சொல்லலாம் நம் தனிமையை போக்கும் சமுதாயம் என்றும் சொல்லலாம்