ஆம் அவள் பூக்களின் ராணி தான் எத்தனையோ வகை பூக்கள் இவ்வுலகில் உண்டு அவை அத்தனையும் இவள் கவிதையிலும் உண்டு நாங்கள் பார்க்காத பூக்கள் பல உண்டு அவை அனைத்தையும் கவிதை வடிவிலும் நிழல் வடிவிலும் காட்டிய பெருமையும் இவளுக்கு தான் உண்டு பூக்கள் பேசி நாம் யாரும் கேட்டதில்லை அப்படி ஒருவேளை பேசினால் நிச்சயம் இந்த ராணியின் கனி மொழி போலவே அதன் பேச்சிலும் அன்பும் பாசமும் அளவில்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை பூக்களே நீங்கள் பூக்க தவறினாலும் உங்கள் பெருமை இந்த ராணியின் மூலம் கவிதை வடிவில் பூக்க தவறாது நீங்கள் சில நேரம் நறு மனம் வீச தவறலாம் ஆனால் இவள் கவிதையில் நறுமணம் தவறியதே இல்லை உன்னை நேரடியாக பார்த்தால் கூட சில பேருக்கு பூரிப்பு ஏற்படாது ஆனால் இவள் கவிதை வடிவில் உன்னை பார்த்து பூரித்து போகாத ஆள் இங்கு யாரும் இருக்க முடியாது பூக்களே நீங்கள் உங்கள் ராணியின் மகுடத்தில் மாலையாக வேண்டுமா தினசரி பூத்து குலுங்குங்கள் தவறாமல் உங்களை சூடி கொள்வாள் அவள் மகுடத்தில்
azhagaana kavithai ram pookalin raani ' veni idhayathai kavithaiyaalaiye thirudum thozhi ram'in intha kavithai'kku thalaivi... ungal kavithaikku :bowdown ungal thozhamaikku :bowdown
ராம்ஸ் - பூக்களின் ராணிக்கு ஒரு கவிதை படித்தமைக்கு என் முதற்கண் நன்றி ஐயோ நாம் எழுதாமல் ஒரு அறிய வாய்ப்பை விட்டு விட்டோமே என்று எனக்குள் ஒரு இயக்கம் நீங்கள் வேணிக்கு தக்க பாராட்டை எங்கள் எல்லோர் சார்பாகவும் கவிதை வடிவத்தில் எழுதியது எனக்கும் (இங்கு மற்ற எல்லோருக்கும் கூட) மிகவும் சந்தோஷம் தரும் ஒரு விஷயம். Hats off to you Rams :thumbsup
ராம், ரொம்ப நல்ல விஷயம். கவிதை வடிவில் பூக்களின் ராணியை அழகு படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள். பூக்களுக்கு பொறாமை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.