அந்திவானில் அஸ்தமிக்கும் சிவப்பு சூரியன் கரையை தேடி ஆர்ப்பரிக்கும் அலைகள் வெப்பம் தணிந்து மிதமாக வீசும் உப்புக்காற்று கால் நனையும் தண்ணீரில் சிரித்தபடி அவள் கண்கொள்ளா காட்சியை புகைப்படம் எடுக்க இமைபொழுதில் வெகுண்டெழுந்து வந்த உயரலை உடனிருந்த சிறுவர்களின் பாதங்களை பதம் பார்க்க தவறி விழுந்தவர்களை மீட்கும் பொருட்டு அவர்கள் பின்னே சென்றவளை இழுத்து சென்றது கடல் நீரோட்டம் ஆபத்தில் சிக்கிய குழந்தைகள் காப்பாற்றப்பட்டு கரையில் ... காக்க நினைத்த புன்னகை தேவதை விதியின் வசத்தில் குடும்பசங்கிலியில் பிணைக்க நினைத்து காக்க முயன்றோரின் கண் முன்னே காணாமல் மறைந்தாள் .... கடலினுள் அவளுடலை மட்டும் திருப்பித்தந்த கடல் அவள் புன்னகையை எடுத்து சென்றது ! Kind Request : Please maintain anonimity to respect & honor the departed angel. No more mention about any details
@jskls ungal kavidhai kan munne kaatchikalai kondu niruththi vittathu. காக்கும் தேவதை காணாமல் போனதை விதியென்பதா இல்லை அவள் புன்னகையை தன்னுடன் இணைக்க கடல் அன்னை செய்த சதி என்பதா அந்த உயிருக்கு விலையேதும் இல்லை .தலை வணங்குகிறேன் தாயே
அந்த உயிருக்கு விலையேதும் இல்லை. Yes well said on beautiful choice of words. This line reminds one of famous palum pazhamum song by kannadasan.cholladha chollukku vilai yaydhum illain.... Thanks and regards.