1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தம் புதிய இளவேனில்!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, May 18, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-1:


    மிக மிக மெல்லியதாய் அரும்பிய அந்த இனிய காலை வேளையிலே அழகான பனிப்புகையாய் காட்சியளித்த அந்த இடம் ரம்யமாய் தான் இருந்தது! அதை ரசித்தவாரே வீட்டு வெளியில் புதியதாய் பூத்த ரோஜாவாய் கோலமிட்டு கொண்டிருந்தாள் தர்ஷனா!!

    அந்த காலை பொழுதுக்கே உண்டான சில்லிப்பு காற்று முகத்தில் மோத இப்படி காலையில் கோலமிடுவது தான் எவ்வளவு இனிமை?? என்று இந்த விஷயத்தில் மட்டும் அம்மாவுக்கு அவள் விட்டு கொடுத்ததே இல்லை!

    அம்மா என்னதான் காட்டு கத்தாய் "ஏண்டி காலைல இப்படி பனில இவ்வளவு நேரம் கோலம் போற?? சும்மா ஒரு ரெண்டு மூணு புள்ளில போட வேண்டியது தானே!! என்று அம்மா கூறினால் அவளுக்கு சிரிப்பு தான் வரும்!!
    சிரித்து கொண்டே!
    "அம்மா ரெண்டு மூணு புள்ளி வெச்சு போட்டா அதுக்கு பேர் கோலமில்லமா! என்று மேலும் சிரிப்பாள்!
    மகளது செல்ல குரும்பை ரசித்தாலும் அந்த தாய் இதை கூறாத நாளில்லை!!
    அன்பு மகளின் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் அதை எப்படி தாங்குவது????? தவம் இருந்து பெற்ற பிள்ளை ஆயிற்றே என்று உருகுவாள்!!

    தர்ஷனாவுக்கு இன்னொரு பழக்கம்!
    எப்போதும் போடும் கோலத்தை அரிசி மாவால் தான் போடுவாள்!
    அம்மா "ஏண்டி இப்படி பெரிய கோலத்த அரிசி மாவுல போட்டு வீணாக்குற????" என்று அம்மா கண்டித்தால்
    "அம்மா நம்ம கோலம் போடறதே எறும்பு மாதிரி சின்ன சின்ன ஜீவா ராசி எல்லாம் சாப்பிட்டு மகிழ தான் அதை போய் சுண்ணாம்பு பவுடர் ல போட்ட அதுங்க ஆசையா வந்து சாப்பிட்டு வாய் எரிய சாபம் கொடுக்கும் மா!
    நமக்கு எதுக்கு அந்த பாவம் இப்படி நிறைய அரிசி மாவுல போடும்போது அது வயிறார சாப்பிட்டு வாழ்த்தும் இல்ல மா? என்று மகள் அழகாய் காது ஜிமிக்கி ஆட கூறும் போது மற்றவை எல்லாம் அந்த தாய்க்கு மறந்தே போகும் அவ்வளவு பாசம் அந்த அழகு பதுமை மேல்!

    அந்த மதுரை மீனாட்சியே மகளாய் தன் வயிற்றில் பிறந்ததாய் தான் தர்ஷனாவின் தாய் தந்தை இருவருமே நம்பினார்!
    அப்படி ஒரு தெய்வீக கலை அவள் முகத்தில்!
    அது மட்டுமன்றி மகளின் இந்த இரக்க மனப்பான்மை ஒரு பக்கம் அவர்களுக்கு பெருமையாய் கூட இருக்கும்!
    அப்பா நீங்க குடுத்த காசுல கம்மல் வாங்கிட்டேன்! கொலுசு வாங்கிட்டேன்! புதுவை வாங்கிட்டேன்னு! சொல்ற இந்த கால பெண்கள் மத்தியில் மகள் "அப்பா இன்று ரோட்டில் ஒருவரை கால் இல்லாமல் பார்த்தேனா மனசுக்கு என்னமோ போல ஆயிடுச்சு அவருக்கு என்னால முடிஞ்சதா மூணு வேளை சாப்பிட சாப்பாட்டுக்கு வழி செய்துட்டு வந்தேன் பா!" என்று மகள் கூற இந்த புண்ணியம் எல்லாம் தன் மகளை நன்றாய் வாழா வைக்கட்டும் கடவுளே! என்று அந்த பெற்றோர் மனம் குளிர்ந்து போவார்கள்!
    பெண்ணை நல்ல முறையில் வளர்த்ததற்கு பெருமையாகவும் இருக்கும்!

    ஆமாம் தர்ஷனா என்றுமே அவள் பெற்றோருக்கு பெருமை தேடி தர மறந்தாள் இல்லை!
    படிப்பில் ஆகட்டும் செய்யும் செயல்கள் பாட்டு, நடனம் என்று அனைத்திலும் கை தேர்ந்தவலாய் இருந்ததோடு இல்லாமல் குணத்தில் பண் மடங்கு மேற்பட்டவலாய் இருந்தாள்!
    வீட்டுக்கு வரும் பெரியவர்கள் கூட பெற்றால் உன் மகளை போல் பெற்று கொள்ள வேண்டுமடி என்று கூறும் அளவுக்கு!
    இப்படி கேட்கும் போது அவள் தாய் தேவகிக்காகட்டும் தந்தை முருகேசனுக்காகட்டும் பெருமையில் உச்சி குளிர்ந்து போகும்!
    மலரோடு கூடிய நாறும் மணக்கும் என்பதை போல் பெண்ணால் தங்களுக்கும் பெருமை என்னும் போது எந்த அப்பா அம்மாவுக்கு தான் பெண்ணின் மேல் பாசம் ஊற்றெடுக்காது????

    ஆனால் அந்த பாசத்தை ஏன் வைத்தோம்????? என்று எல்லா பெற்றோரை போல் அவர்களும் வருந்தும் நாளும் விரைவில் வரும் என்று அவர்களுமே எதிர்பார்க்கவில்லை!!!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yams
    very very nice starting dear
    starting la eumbukku help panra character
    tharsana super name
    nalla iurkku dear
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yams
    very very nice starting dear
    starting la eumbukku help panra character
    tharsana super name
    nalla iurkku dear
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hey naan than first paduchen..........

    next aarambuchutiya........ok ok heroine introduction romba super.......

    avloda charecter a ippave konjam kodu pottu kaamichutta.......

    first a suspence aa.........

    yamini thodangi vittai un attathi.....keep rocking dear......:bowdown
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks ram! and latha dear!:cheers
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    lathaa...............neenga onnum first padikkala.........naa ava post pannunathula irunthu padichittu irukken.......fb kudukurathukulla ennoda uyire poyiruchchu
     
  7. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Yams,

    Mangalagarama aarambam agivittathu kathai.

    Vaazhthukkal.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri kala!:cheers
     
  9. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Yams kalakitta openinglaye. Title ,Heroine name ellame nalla irukku. Keep rocking :thumbsup
     
    Last edited: May 18, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Oh.
    You have started your next romantic(irukathunu nenaikiren) story.
    Good .Topic nalla irukku.Puththam puthiya Yamini.Aiii ithukoda nalla irukke.
    Wishes.
    Expecting a different track of chronicle from you dear.
    Keep rocking.
     

Share This Page