கடலோரம் இருந்த நீ கடல் தாண்டி சென்ற போதும் கடுகளவும் மாறவில்லை கர்மவீரர் காணாத என் தலைமுறைக்கு தன்னலமற்ற தலைவனும் நீ தான் தலைகனமற்ற தமிழனும் நீ தான் !! இதழோரம் நீ சிந்தும் புன்னகையை இனிமேலும் கண்டிட ஒரு வாய்ப்பும் இல்லையென்று ஒடிந்து போன நெஞ்சங்கள் பல கோடி புவி வியந்திடும் மேதையே !! உனைப்போல் தலைவனை இறைவன் படைப்பான் ஒருமுறை அதைக் கண்டது எங்கள் தலைமுறை காலனும் உன்னுடன் சில நாள் வாழ்ந்திட தானோ காரணம் சொல்லாமல் உனையே பிரித்துச் சென்றானோ!! --------- நிரஞ்சன்
Dear Niranjan, Nice eulogy! Though Agni paravai has vanished, it would have certainly created 'at least a handful of agni Kunjus,which at the right time will spread the wings of fire for the benefit of the world. Jayasala 42