1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதியின் புகழ் கொஞ்சம் பாடலாமா...?

Discussion in 'Regional Poetry' started by Induslady, Dec 11, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    ஆயிரம் தெய்வங்கள்
    ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
    அலையும் அறிவிலிகாள்!-பல்
    லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
    டாமெனல் கேளீரோ?

    மாடனைக் காடனை வேடனைப் போற்றி
    மயங்கும் மதியிலிகாள்!-எத
    னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
    றோதி யறியிரோ?

    சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
    சுருதிகள் கேளீரோ?-பல
    பித்த மதங்களி லேதடு மாறிப்
    பெருமை யழிவீரோ?

    வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
    வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
    வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
    வேத மறியாதே.

    நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
    நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
    நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
    நான்மறை கண்டிலதே.

    போந்த நிலைகள் பலவும் பராசக்தி
    பூணு நிலையாமே-உப
    சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
    சான்றவர் கண்டனரே.

    கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
    காட்டும் மறைகளெலாம்-நீவிர்
    அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
    அவங்கள் புரிவீரோ?

    உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
    ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
    கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
    கூவுதல் கேளீரோ?

    மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
    வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
    கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
    காட்டவும் வல்லீரோ?

    ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
    உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
    ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
    உணர்வெனக் கொள்வாயே.
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சிந்து நதியின்மிசை இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்..

    சிந்து நதியின்மிசை நிலவினிலே
    சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
    தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்.
    கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
    சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
    காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
    காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
    ராசபுத் தானத்து வீரர் தமக்கு
    நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.
    பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
    பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
    கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
    காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.
    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
    குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம
    கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.
    மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
    வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
    சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
    சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
    காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
    கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
    ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
    உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கும்மியடி பெண்ணே கும்மியடி இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
    பேசிக் களிப்பொடு நாம்பாடக்
    கண்களி லேயொளி போல வுயிரில்
    கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே

    கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
    குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
    நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
    நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
    விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)

    மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
    மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
    வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
    வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)

    நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
    நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?
    கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
    கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)

    கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
    வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)

    பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
    இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
    சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
    சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)

    காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
    காரியம் யாவினும் கைகொடுத்து,
    மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
    மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மோகத்தைக் கொன்றுவிடு இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
    மூச்சை நிறுத்திவிடு
    தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லாலதில்
    சிந்தனை மாய்த்துவிடு
    யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
    ஊனைச் சிதைத்துவிடு
    ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
    யாவையும் செய்பவளே!

    பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
    பாரத்தை போக்கிவிடு
    சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச்
    செத்த வுடலாக்கு
    இந்த பதர்களையே - நெல்லாமென்
    எண்ணி இருப்பேனோ
    எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.

    உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
    கள்ள முருகாதோ -அம்மா பக்திக்
    கண்ணீர் பெருகாதோ?
    வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு
    வேட்கை தவிராதோ?
    விள்ளற் கரியவளே - அனைத்திலு
    மேவி இருப்பவளே!
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மனதிலுறுதி வேண்டும் இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    மனதிலுறுதி வேண்டும்
    மனதிலுறுதி வேண்டும்
    வாக்கினிலே இனிமை வேண்டும்
    நினைவு நல்லது வேண்டும்
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
    மனதி லுறுதி வேண்டும்

    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்
    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
    தரணியிலே பெருமை வேண்டும்
    மனதி லுறுதி வேண்டும்

    கண் திறந்திட வேண்டும்
    காரியத்தி லுறுதி வேண்டும்
    பெண் விடுதலை வேண்டும்,
    பெரிய கடவுள் காக்க வேண்டும்
    மண் பயனுற வேண்டும்
    மண் பயனுற வேண்டும்
    வானகமிங்கு தென்பட வேண்டும்
    உண்மை நின்றிட வேண்டும்
    ஓம் ஓம் ஓம்.
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நெஞ்சு பொறுக்குதில்லையே இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்து
    விட்டால்கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
    கோடியென் றாலது பெரிதாமோ?

    அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
    ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
    நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
    நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)

    சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
    சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
    கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
    கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
    தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
    சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
    ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
    அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

    எண்ணிலா நோயுடையார் - இவர்
    எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
    கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
    காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
    நண்ணிய பெருங்கலைகள் - பத்து
    நாலாயிரங் கோடி நயந்து நின்ற
    புண்ணிய நாட்டினிலே - இவர்
    பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சுட்டும் விழிச் சுடர்தான் இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
    பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
    நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ


    சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
    நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
    கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
    வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்


    சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
    மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று...
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆசை முகம் மறந்து போச்சே இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...
    ஆசை முகம் மறந்து போச்சே -இதை
    யாரிடம் சொல்வேனடி தோழி
    நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
    நினைவு முகம் மறக்கலாமோ
    (ஆசை)

    கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
    கண்ணனழகு முழுதில்லை
    நண்ணு முகவடிவு காணில் - அந்த
    நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
    (ஆசை)

    தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
    சிறப்பை மறந்துவிட்ட பூவும்
    வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
    வையம் முழுதுமில்லை தோழி
    (ஆசை)

    கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
    கண்களிருந்து பயனுண்டோ
    வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
    வாழும் வழியென்னடி தோழி
    (ஆசை)
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கண்ணன் என் சேவகன்

    கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
    வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
    'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
    பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
    வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;

    பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
    ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
    தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
    உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
    என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;

    சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
    சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
    இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
    எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
    ''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

    வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
    சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
    சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
    ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
    காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;

    இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
    சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
    சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
    கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
    ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்

    நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
    என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
    ''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
    கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
    ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;

    தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
    ''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
    கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
    தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
    நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்

    ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
    ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
    காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
    பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
    கண்டு மிகவும் களிப்புடனே நானவனை

    ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
    நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
    பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
    பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
    கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்

    வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
    வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
    தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
    மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
    ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்

    பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
    பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
    நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
    பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
    எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்

    இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
    கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
    எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
    செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
    கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,

    தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
    ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
    கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
    கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...


    தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)

    1.
    தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி

    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
    எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)

    2.
    தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
    செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
    மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
    மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)

    3.
    அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
    அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்;
    குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
    குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)

    4.
    பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
    பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
    வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)

    5,
    புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
    பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே - அதைக்
    கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)

    6.
    அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
    ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
    எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
    எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)

    7.
    விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
    வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
    இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
    இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)

    8.
    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
    அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
    எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
    யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)

    9.
    கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
    குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
    ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
    அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத)
     

Share This Page