நெருங்கிவரும் சீரடி சீரடியை ஆளுகின்ற ஸாயிதேவன் பாதம் சேருகின்ற பாவமெலாம் தீர்த்திடவே போதும் போதம்பெற நாதனவன் வாழ்க்கை வரலாறு போதுமது ஒன்றுமட்டும் என்மனமே நாடு நாடிவந்த கண்களுக்குள் நாதன்முகம் சிரிக்கும் கூப்பிநின்ற கைகளுக்குள் வரங்களை நிறைக்கும் நிறைவுடனே ஸாயியினை நோக்கிவைக்க ஓரடி நூறடிகள் அவன்வைப்பான் நெருங்கிவரும் சீரடி வீயார்