நெஞ்சம் மறப்பதில்லை மறந்தும் உனை மறக்க நினைத்ததில்லை, நினைத்தும் உனை மறக்கத் துணிவில்லை, துணை என நீயிருக்க, நான் என் உயிர் காக்க, காக்க காக்க காதல் காக்க, காரிகை இவளை காக்க, வெறுமை நீக்க, வானவில்லாய் வந்திடு, வண்ணம் தந்திடு, உண்மைக் காதல் பொய்ப்பதில்லை, நெஞ்சம் மறப்பதில்லை.
aah.. ithu sari... ipdi eluthunaa thaana naan onnum puriyaama mulikka mudiyum.....:rantok.. vidunga.. ennaikku enakku yaaru yethu solli purunjuthu...ithu puriya... ellarum kandippa nallaarukku nu solluvaanga... so athu correct ah thaan irukkum.. enakku puriyaatiyum naanum soldren........ SUPER NATS...
நோக்க நோக்க இவண் கண் நோக்க நோக்க. நெட்டி முறித்து போக்க போக்க உடல் வலி போக்க போக்க பார்க்க பார்க்க நீங்கள் கண் நோக பார்க்க பார்த்த பட வரிசை இங்கே சேர்க்க சேர்க்க தாக்க தாக்க அவை என்னையும் தாக்க தாக்க ............ஓடுகிறேன் நானும் குறுந்தகடு வாங்க வாங்க .........யம்மா காரிகை சீக்கிரமா வந்து அய்யாவின் இருப்பிலே வண்ணம் சேர்த்திடு .....அவர் எண்ணம் களைந்திடும் முன் :coffee
நான் ஏதோ பழைய பாட்டு படுகிறார் நட்ஸ் என்று பார்க்க வந்தால்...இப்படி ஓர் அழகான கவிதை எனக்கு பரிசாய் காத்திருக்கிறது.....
பெண்ணாக இருந்தே மீண்டும் ஒரு கவிதையா?? காதலித்த நெஞ்சம் ஒரு நாளும் தான் காதலை மறப்பதில்லை மாதங்களும் வருடங்களும் பல காத்திருக்கவும் மறுப்பதில்லை தன் உயிரான காதலுக்கு சிறு வலி எனினும் பொறுப்பதில்லை தன் உயிர் போகும் வலி எனினும், அவனை வெறுப்பதில்லை நெஞ்சம் மறப்பதில்லை.
சஷ்டி கவசம் பாணில நட்ஸ் காதல் கவசம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரா ? உடனே கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவும். ரசித்தேன் , நண்பரே. ganges