நெஞ்சம் பொறுக்கவில்லை! இந்த மதிகெட்ட மாந்தரை நினைத்திடுகையில் மனம்மிகக் கொந்தளிக்கின்றதே! ஒருகொலைகாரனைத் தப்பவிட்டதற்கு இரண்டாயிரம் அப்பாவி மக்களைக்கொல்ல சதித்திட்டம் தீட்ட எப்படி மனம் துணிந்ததோ? இவர்கள் விடுதலைப் போராளிகளா-அன்றி பயங்கரவாதிகளா? அந்தமானில் நிலனடுக்கமென்றால் ஆஸ்திரேலியாவில் சுனாமி வந்ததாம் என்பதுபோல் இலங்கைக் குடிமகன் செய்த கொலைக்கு இந்தியமக்களைக் கொல்லத் துணிந்ததற்கு எந்த வகையில் இவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள்?
மனிதநேயம் அழிகிறது என்று சொல்ல இதை விட வேறென்ன வேண்டும்..... அடி பட்டு கிடக்கும் மனிதனை விட அவரவர் வீடு செல்வது இப்போ முக்கியம்..... ஒரு மனிதன் நல்ல விளையாடவில்லை என்றால் சண்டைக்கு போகும் ஜனம், ஒரு மனிதன் சரியாக வேலை பார்க்கவில்லை என்றால் சும்மா இருப்பாங்க..... கோய்லுக்கு ஒரு நடிகை வந்தால், அவள் மீது தான் இவர்கள் கண்கள்... லஞ்சம் வாங்கும் மனிதர்களை இவர்கள் பார்ப்பது கூட இல்லை.... அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது... இவை தான் இன்றைய சமுதாயம் என்ற எண்ணம் சுடுகிற நெருப்பென்றால், நாளைய சமுதாயம் எப்படி என்ற கேள்வி மனத்தை புரட்டி போடுகிறது..... உங்கள் கவிதை பிரமாதம், வரிகளில் வலி மனத்தை சுடுகிறது.....
அன்புள்ள சந்தியா, தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் கொதித்தாலும் மக்கள் மற்றும் அரசின் ஏதும் செய்ய இயலாக் கையறு நிலை கண்டு மனம் பொறுமுகிறது. ஆண்டவனிடம் முறையிடுவதைத் தவிர என் போன்ற முதுகுடி மக்களுக்கு ஏதும் தோன்றவில்லை. அன்புடன், புஷ்பவல்லி