அரிதாகப் பணியில் ஆழ்ந்திருந்த பொழுதில் அலை போலக் கணினியின் திரையில் தோன்ற, அலுப்பே காரணமாய் இருக்குமெனும் முடிவில், அண்ணாந்தும், குனிந்தும் பார்வையை ஊன்ற, தலை மிக இலேசாகச் சுழல்கிறதா? அல்லது, தூக்கத்தில் உடல் விழப் போகிறதா? என்று, சிந்திக்க, அவ்வறையே ஊஞ்சல் ஆடியது, கணினியும் விழுந்து விடப் போகிறது என்று, அதைப் பிடிக்க முயன்றவன் காலடியில், பிடிப்பின்றி கீழே சரிவதை உணர்ந்து, அலற முற்பட, அந்நேரம் தொண்டையில், பெரிதாகும் பந்து போல் ஏதோ தடுத்து, தலை சுற்றி, இருந்த பொருட்களும் விழுந்து, தனியாக இருப்பதையும் தாமதமாய் உணர்ந்து, வாயில் ஈரப்பதமின்றி மொத்தமாய் உலர்ந்து, நிற்காமல் பேசுகின்ற நானும் மிகப் பயந்து, நினைவு தப்பாமல் இருந்தது அதிசயமென்றே, இன்றைக்கும் நினைத்துக் கொள்வது உண்டு. ஆடிய அறை நிற்க நிலவிய அமைதியொன்றே, சற்றே ஒரு நிம்மதியை வழங்கியது அன்று. அறை விட்டு வெளியில் ஓட, அங்கே பல பேர், என்னைப் போல் அதிர்ச்சியில் இருக்கக் கண்டு, என்ன நிகழ்ந்ததென்று, அறிந்ததும், உடம்பே, தூக்கி வாரிப் போடுவதை உணர்ந்தேன் அன்று. -ஸ்ரீ
Great rgs , to pen the physical movements when one feels during an earth quake. It may last for a few seconds but the impact will be great. I too had this feeling some 3-4 years back when Chennai had tremors in the early morning. It was a feeling like as if the entire floor was swinging like a floor. Thank god nothing happened and all was safe. Nice to know that you too had friends when you came out ha ha ha. Some movements cannot be defined nor written.
உங்கள் உடனடிப் பாராட்டுக்கும், அனுபவப் பகிர்வுக்கும் நன்றி நித்யகல்யாணி. வெவ்வேறு அனுபவங்களை எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட, இது போன்ற பின்னூட்டங்கள் உதவுகின்றன. -ஸ்ரீ
நானும் நடு இரவில் உணர்ந்தேன் அதை எதோ ஓன்று என்று உறைத்த போது உறைந்தேன் சில வினாடிகள் சுதாரித்து என்னை சுற்றி நின்ற என் குடும்பம் அணைத்து ஆறுதல் சொல்லி அவர்கள் கண் அயர்ந்ததும்... நான் விழி மூடாமல் கற்பனையில் ஆழ்ந்திருந்தேன்... கவிதை வந்தது.... உங்கள் வரிகள் போல் மிரட்சியில் அல்ல...கொஞ்சம் மகிழ்ச்சியாய் பூகம்பம் ......பூக் கம்பம்!!!!!! நான் என் வரிகளில் சொல்லாமல் விட்ட அந்த ஜுரம் தரும் நிகழ்வினை உங்கள் வரிகளில் உணர்ந்தேன்.
பல(ர்) அனுபவங்கள் இப்பதிவின் மூலம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி சரோஜ். -ஸ்ரீ
குஜராத் நிலஅதிர்ச்சி நேரிடையாக அனுபவித்தார்கள் என் அக்காவும், அவள் குடும்பமும் . இதை படித்ததும் , எனக்கு அந்த நினைவு வந்தது ஸ்ரீ
நிலநடுக்கம்,நினைத்தால் அனைவர்க்கும் நடுக்கம். உங்களது அனுபவ நடுக்கம்.எங்களது கேள்வி அறிவு நடுக்கம் மட்டுமே! ஆனாலும் இந்த மன அதிர்வுகளின் நினைவு,நினைவு தப்பும் வரை மறையாது.