1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிலவும், நாமும்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Aug 31, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கருநிலவே போல் முழு
    உருவின்றிக் கிடந்தோம்
    ஒரு சில மாதத்தில் மழு
    உரு பெற்றே பின் வளர்ந்தோம்.

    கூன்பிறையாளன் அருளியதால்
    தான் குறையாமல் நாம் வளர்ந்தோம்.
    தேன் நிறை பூ நிகர் அன்னையினால்
    வான் காண் விரிவதும் கொண்டோம்.

    கலை ஏறிடவும் ஒளி கூடிடவே
    தலை தூக்கித் தருக்கும் மதி எனவே
    சிலை போலிருந்தாரும் அசைவுறவே
    உலை மேல் பாலென தாய் பொலிந்தனளே!

    பின்னொரு நன்னாளில் நாமும்
    அன்னையின் உடலின் பிரிந்தோமே!
    தன்னைக் கரைத்தே அவள் தினமும்
    கன்றை, பசுவென்றே வளர்த்தாளே!

    நாளும் வளர்ந்தோம் நிலவே போல்!
    தாளும், தயையும் நமை காத்திடவே
    வாளும், பிறவும் நமை அண்டிடுமோ?
    கோளும், கிழமையும் இடர் தந்திடுமோ?

    பார்த்தல், கேட்டல், தொடல், ருசி என்றே
    சேர்ந்திட விரைவில் நாம் வளர்ந்தோமே!
    ஆர்த்தலும், அறிதலும் பின் சேர்ந்திடவே
    கூர்த்தலும் கொண்டே பணி செய்தோமே!

    முழு நிலவும் பின்னர் குறைவது போல்
    முழுத்திறனும் குறைந்திடக் கண்டோமே!
    அழும் குழந்தை நிலைக்குச் சென்றாலும்,
    எழும் பிறவியில் நிலவாய் வளர்வோமே!
     
    periamma, jskls and vaidehi71 like this.
    Loading...

Share This Page