தினந்தோறும் உன்னைப் பார்த்து, உன் தாளில் ஒன்றைக் கிழித்து, அன்றைக்கு என் இராசி பார்த்து, வழக்கம் போல் மெல்ல உயிர்த்து, அன்றேனும் என் நிலையில் மாற்றம், வர வேண்டும் என இறையை வேண்டி, தினம் கனவில் காண்கின்ற ஏற்றம், நனவாகும் நாள் வரும் என நம்பி, எண்ணியபடி படி இறங்குகிறேன். பல இடங்களுக்குச் செல்கிறேன். அதே பதில் வரவும் வெம்புகிறேன். அலுத்து இரவில் வீடு திரும்புகிறேன். முடிந்து விட்டதால் நாள் தாளை, நாட்காட்டியில் விட்டு வைப்பதில்லை. இன்று முடியாது போனாலும் நாளை! என் முயற்சியும் நிற்கப் போவதில்லை. -ஸ்ரீ
நாட்காட்டியில் தாளை விட்டு வைத்தாலும், காலம் என்னவோ நிற்க போவதில்லை. காலம் தன் கடமையை தவறாது செய்வது போல், நாமும் நம் கடமையையும் , முயற்சியையும் தவறாது செய்வோமே..
நாள் கட்டி தன் வேலையை சரியாய் செய்ய, நாமும் நம் வேலையை சரியாய் செய்வோம், நடப்பது,நடக்கும் காலத்தில் நடக்கும். very nice.